இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
டோலிவுட்டின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் 150வது படத்தை இயக்குவதாக கூறப்பட்ட பூரி ஜெகன்நாத் தற்போது தனது அடுத்தடுத்த படங்களில் பிசியாகியுள்ளார். பூரி ஜெகன்நாத் சிரஞ்சீவியிடம் கூறிய படத்தின் கதை அவருக்கு பிடிக்காததால் சிரஞ்சீவியின் 150வது படத்தை பூரி ஜெகன்நாத் இயக்கவில்லை என தகவல் வெளிவந்தது. பூரி ஜெகன்நாத் தற்போது நடிகர் வருண் தேஜாவை நாயகனாக வைத்து லோபர் என்ற படத்தை இயக்கி வருகின்றார்.இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் 1 ஆம் தேதி கோவாவில் துவங்கவுள்ளது. செப்டம்பர் 15 ஆம் தேதி வரை கோவாவில் படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இப்படத்தைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சி.ஆர்.மனோகருடன் பூரி ஜெகன்நாத் இணையவுள்ளார். தயாரிப்பாளர் சி.ஆர்.மனோகரின் தம்பி பூரி ஜெகன்நாத்தின் அடுத்த படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார் என்று செய்திகள் கூறுகின்றன.