ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
டோலிவுட்டில் நடிகர் மகேஷ் பாபு நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளிவந்த ஸ்ரீமந்துடு படத்தில் கிராமங்களை தத்தெடுத்து அவற்றிற்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது. அதனை நிஜத்தில் பின்பற்றும் விதமாக படத்தின் நாயகன் மகேஷ் பாபு ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள புர்ரிபேலம் எனும் தனது சொந்த கிராமத்தை தத்தெடுத்துள்ளார். அதே போல் நாயகி ஸ்ருதிஹாசனும் தமிழகத்தில் ஒரு கிராமத்தை தத்தெடுக்க பரிசீலனை செய்து வருகின்றாராம். திரைத்துறை தாண்டி பல சமூக சேவைகளை செய்து வரும் நடிகரும் ஸ்ருதிஹாசனின் தந்தையுமான கமலஹாசன் தான் தனது இந்த தத்தெடுக்கும் திட்டத்திற்கு காரணம் என்று ஸ்ருதி கூறியுள்ளார். தற்போது தமிழகத்தில் எந்த கிராமத்தை தத்தெடுப்பது என்ற தீவிர ஆலோசனையில் ஸ்ருதி ஈடுபட்டுள்ளாராம். எந்த கிராமத்தை தத்தெடுப்பது என்று முடிவு செய்தபின் அதற்கான அடுத்த கட்ட பணிகள் துவங்கப்படும் என்றும் ஸ்ருதி கூறியுள்ளார்.