பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் |
சிம்பு நடித்த வாலு படம் ஏற்கனவே பல வழக்குகளை சந்தித்த பிறகுதான் திரைக்கு வந்தது. அதையடுத்து இப்போது, அந்த படத்தை தெலுங்கில் ஷார்ப் என்ற பெயரில் வெளியிடும் டப்பிங் வேலைகள் சென்னையில் உள்ள ஃபோர் பிரேம் தியேட்டரில் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மறுபடியும் அந்த படம் சம்பந்தமாக ஒரு பிரச்சினை நீதிமன்றத்துக்கு சென்று திரும்பியிருக்கிறது. அதாவது, வாலு படத்தை மூன்று வருடங்களுக்கு முன்பு தயாரிக்க தொடங்கிய போதே, தெலுங்கு ரைட்ஸ் வியாபாரமாகி விட்டதாம். ஒன்றரை கோடி ரூபாயை அப்போதே நிக் ஆர்ட்ஸிடம் கொடுத்து விட்டார்களாம். ஆனால், இப்போது அவர்கள் தெலுங்கு ரைட்ஸ் பற்றி பேசியபோது, கூடுதல் தொகை தர வேண்டும் என்று கேட்டார்களாம். அதற்கு தெலுங்கு ரைட்ஸை வாங்கிய நிறுவனம், ஒன்றரை கோடி ரூபாய்க்கு மூன்று வருடம் வட்டி போட்டு பாருங்கள். அதுவே பெரிய தொகையாகி விடும் என்றார்களாம். இதையடுத்து பிரச்சினை பெரிதாகி விட்டதாம். நிக் ஆர்ட்ஸ் வாலு படத்தின் தெலுங்கு ரைட்ஸ்க்காக அக்ரிமென்ட் போட்டுக்கொடுத்த விவரங்கள் அனைத்தும் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டதாம். அதன்பிறகு நடந்த விசாரணைக்குப்பிறகு அதே தொகைக்கு தெலுங்கு உரிமைத்தை கொடுக்க வேண்டும் என்ற தீர்ப்பாகி விட்டதாம். இந்த பிரச்சினை தீர்த்த பிறகுதான் தெலுங்கு பதிப்புக்கான டப்பிங் வேலைகள் நடக்கிறது. ஹன்சிகாவுக்கான டப்பிங் இரண்டு நாட்களில் முடிந்து விட்ட நிலையில், தற்போது சிம்புவுக்கான தெலுங்கு டப்பிங் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.