இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
இந்தியா பாகிஸ்தான் படத்தை அடுத்து விஜய் ஆண்டனி நடித்து வரும் படம் பிச்சைக்காரன். சொல்லாமலே சசி இயக்கி வரும் இந்த படம் ஒரு சமூக பிரச்சினையை மையக்கருவாகக் கொண்டு உருவாகிறது. குறிப்பாக பிறக்காத பேரனுக்காக சொத்து சேர்க்கும் நபர்களை வெளுத்து வாங்குகிறதாம் படக்கதை. அதோடு, இந்த படத்தில் விஜய் ஆண்டனி நிஜ பிச்சைக்காரனாக நடிக்கவில்லை. ஒரு பிரச்சினைக்காக அவர் பிச்சைக்காரன் போல் தலைமறைவாகி நடிக்கிறார். அதற்காக பிச்சைக்காரர்கள் அதிகமாக கூடும் கோயில் வாசல்களில் அதிகமான காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கிறது. அதோடு, பிச்சைக்காரர்கள் உருவாவது பற்றிய ஒரு தத்துவப்பாடலும் இந்த படத்தில் உள்ளது.
மேலும், இந்தியா பாகிஸ்தான் படத்தில் விஜய் ஆண்டனி நடித்து வந்தபோது இந்த பிச்சைக்காரன் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டார் சசி. ஆனால், சமீபத்தில்தான் வசன காட்சிகளை படமாக்கி முடித்துள்ளனர். ஆனபோதும் இன்னும் இரண்டொரு பாடல் காட்சிகள் படமாக்கப்பட வேண்டியுள்ளதாம்.
இதற்கிடையே, நவம்பரில் படம் ரிலீஸ் என்று செய்தி வெளியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது அப்படத்தின் எடிட்டிங் வேலைகளை முடுக்கி விட்டிருக்கிறார் சசி. மொத்த எடிட்டிங் பணிகளும் முடிந்தபிறகு ஏதேனும் காட்சிகளை ரீஷூட் பண்ண வேண்டுமென்றால் பேலன்ஸ் உள்ள பாடலை படமாக்கும்போது அதையும் சேர்த்து படமாக்க திட்டமிட்டுள்ளார்களாம்.