ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
குழந்தை நட்சத்திரமாக தமிழ், தெலுங்கு படங்களில் நடித்தவர் ஸ்ரீதேவி. அதையடுத்து கதாநாயகியாக தென்னிந்திய சினிமாவை கலக்கியவர், ஒருகட்டத்தில் இந்திக்கும் சென்றவர், அங்கேயும் அதிக படங்களில் நடித்து புகழின் உச்சிக்கு சென்றார். அப்படி சென்றவர் பாலிவுட் படதயாரிப்பாளர் போனிகபூரையே திருமணம் செய்து கொண்டு மும்பைவாசியாகி விட்டார்.அந்த வகையில் தமிழில் ரஜினிக்கு ஜோடியாக அவர் நடித்த கடைசி படம் நான் அடிமை இல்லை. அதையடுத்து இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் ரீ-என்ட்ரியான ஸ்ரீதேவி, தற்போது புலி படம் மூலம் மீண்டும் நேரடி தமிழ்ப்படத்தில் நடித்துள்ளார். கதைக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த வேடம் என்பதால் அதிக நாட்கள் சென்னையில் முகாமிட்டு அப்படத்தில் நடித்துள்ளார் அவர்.மேலும், இனிமேல் சினிமாவில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டி வரும் ஸ்ரீதேவி, புலி படத்தின் ஆடியோ விழா சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டவர். செப்டம்பர் 6-ந்தேதி ஐதராபாத்தில் நடைபெற்றவுள்ள புலி தெலுங்கு பதிப்பில் ஆடியோ விழாவில் கலந்து கொள்கிறார்.அதோடு, 1986-லேயே தமிழ் சினிமாவை விட்டு வெளியேறிய ஸ்ரீதேவி, 1994வரை தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாட்டை விட ஆந்திராவில் அவருக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்களாம். அதனால் புலி படம் மூலம் ஆந்திர ரசிகர்களை சந்திக்கும் ஸ்ரீதேவி, இதையடுத்து முன்னணி தெலுங்கு ஹீரோக்களின் படங்களில் நடிப்பதிலும் தான் ஆர்வமாக இருப்பதாக செய்தி வெளியிட்டிருக்கிறார்.