'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கலாய்ப்பு மன்னரான கவுண்டமணி, எத்தனை பெரிய ஹீரோக்களாக இருந்தாலும் அவர்களை வா போ என்றுதான் பேசி நடித்திருக்கிறார். அந்த வகையில் ரஜினியுடன் நடித்த படங்களில் யாருமே அவரை வா போ என்று ஒருமையில் அழைத்தில்லை. ஆனால் பதினாறு வயதினிலே படம் தொடங்கி மன்னன், பாபா வரை அவருடன் நடித்த படங்களில் வாப்பா, போப்பா என்று ஏகத்துக்கும் பேசி நடித்தவர் கவுண்டமணி. அதோடு சந்தடி சாக்கில் அவரை கலாப்பதிலும் கைதேர்ந்தவர் கவுண்டர்.
அந்த வகையில், கவுண்டமணி ஒட்டுமொத்த சினிமாக்காரர்களையுமே கலாய்த்து நடித்துள்ள படம்தான் எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது. இந்த படத்தில் படப்பிடிப்பு தளங்களில் நடிகர் நடிகைகளுக்கு கேரவன் வாடகைக்கு விடும் உரிமையாளராக நடித்துள்ள கவுண்டமணி, அவரிடம் கேரவன் புக் பண்ணும்போதே என்ன கம்பெனி? எந்த நடிகர்? என்கிற விவரங்களையும் கேட்டறிந்துதான் அதற்கேற்ற கேரவனை அனுப்புவாராம்.
அப்படி அவர்கள் சம்பந்தப்பட்ட நடிகர்களின் பெயரை சொல்லும்போது, ஓ அந்த நடிகராக, அவன் பத்து விதமான கதைகள் என்றாலும் ஒரேமாதிரி ரியாக்சனை கொடுத்தே நடிப்பவனாயிற்றே என்று தனது பாணியில் கிண்டல் செய்வாராம். இப்படி தற்போதைய பல இளவட்ட ஹீரோக்களையும் கலாய்த்திருக்கிறாராம் கவுண்டர். அதோடு, ஒரு படத்திற்காக பவர்ஸ்டாருக்கு அவரிடம் கேரவன் புக் பண்ணுவார்களாம். பவர் ஸ்டார் ஒருவர் தங்குவதற்கு இரண்டு கேரவன் கேட்பார்களாம்.
அப்போது ஒரு நடிகர் தங்குவதற்கு எதற்காக இரண்டு கேரவன்? என்று கேட்பாராம் கவுண்டமணி. அதற்கு அவர் அந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். அதனால் ஒவ்வொரு வேடத்துக்கும் அவர் வெவ்வேறு கேரவனில்தான் தங்குவார் என்பார்களாம். அதைக்கேட்டு பவர்ஸ்டாரையும் செமத்தையாக கலாய்த்திருக்கிறாராம் கவுண்டர். ஆக, இந்த படம் திரைக்கு வரும்போது பல நடிகர் நடிகைகள் தங்களைப்பற்றி கவுண்டர் வெளிப்படையாக அடித்திருக்கும் கிண்டலைப்பார்த்து அதிர்ச்சியடைவார்கள் என்று கூறப்படுகிறது.