ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் மட்டுமல்லாது இன்றளவும் நிஜ வாழ்க்கையில் கூட அரவிந்த்சாமியின் அழகைப் பற்றிக் குறிப்பிட்டுப் பேசுபவர்கள் அதிகம்தான். 24 வருடங்களுக்கு முன்பு மணிரத்னம் இயக்கிய 'தளபதி' படத்தில் ரஜினிகாந்த் தம்பியாக நடித்து திரையுலகில் அறிமுகமானார். அதன் பின் அவர் நாயகனாக நடித்த'ரோஜா, மறுபடியும்' ஆகிய படங்கள் வெற்றி பெற்று அவருக்கு நல்ல பெயரையும் பெற்றுத் தந்தன. இளம் பெண்களின் மத்தியில் அப்போது தனக்கென தனி இடத்தைப் பிடித்துக் கொண்டார். தொடர்ந்து சில தோல்விப் படங்களில் நடித்தாலும் 1997ல் வெளிவந்த 'மின்சார கனவு' அவருக்கு மீண்டும் ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியைத் தந்தது. அதன் பின் 2000மாவது ஆண்டில் வெளிவந்த 'அலைபாயுதே' படத்திற்குப் பிறகு அரவிந்த்சாமி திரையுலகத்தை விட்டு விலகிவிட்டார். இடையில் எப்போதோ முடிந்த 'சாசனம்' படம் மட்டும் வெளிவந்தது.
அதன் பின் அவரை பல வருடங்களாக கோலிவுட் பக்கம் கூடப் பார்க்க முடியவில்லை. சில வருடங்களுக்கு முன்தான் மீண்டும் திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ள ஆரம்பித்தார். அப்போது அவரைப் பார்த்தவர்கள் மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். மிகவும் குண்டாகி, தலையில் வழுக்கை விழுந்து ஆளே மாறிப் போயிருந்தார். மீண்டும் மணிரத்னம் இயக்கிய 'கடல்' படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆனார். அந்தப் படத்தில் கூட கொஞ்சம் குண்டாகத்தான் தெரிந்தார். ஆனால், இப்போது வெளிவந்துள்ள 'தனி ஒருவன்' படத்தில் சரியான தோற்றத்துடன் மீண்டும் ஒரு ஹீரோவுக்குரிய அழகுடன் மீண்டும் ஒரு ரீ-என்ட்ரியைக் கொடுத்து அசத்தியிருக்கிறார்.