தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ரசிகர்கள்தான் என்னுடைய பலமே, அவர்கள் இல்லாமல் நான் இல்லை என்று நடிகர் சிம்பு டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமானை தொந்தரவு செய்தது பற்றிய சம்பவத்தைப் பற்றி சிம்பு இப்போதுதான் வாயைத் திறந்திருக்கிறார். ஏதோ, இப்போதுதான் சிம்பு அதை செய்ததாக நினைத்துக் கொள்ள வேண்டாம். அவர் சிறு பையனாக இருக்கும் போது செய்தாராம். ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பாளராக வருவதற்கு முன்பு இளையராஜா, டி.ராஜேந்தர் ஆகியோரிடம் கீபோர்டு வாசிப்பாளராக இருந்துள்ளார். அப்போது டி.ஆர் இசையமைக்கும் படங்களுக்காக வேலை பார்க்க வரும் ரகுமானைத்தான் சிம்பு தொந்தரவு செய்வாராம். அது எப்படிப்பட்ட தொந்தரவு என்பதை சிம்பு தெரிவிக்கவில்லை.
'விண்ணைத் தாண்டி வருவாயா' வெற்றிக்குப் பிறகு கௌதம் மேனன், ஏ.ஆர்.ரகுமான், சிம்பு கூட்டணி மீண்டும் இணைந்துள்ள 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. அது சம்பந்தமான ஒரு டிவிட்டர் பதிவில்தான் சிம்பு ரகுமானைத் தொந்தரவு செய்த விஷயத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். 'அச்சம் என்பது மடமையடா' டீசருக்கு ரசிகர்கள் அளித்த வரவேற்புக்கு நன்றி தெரிவித்துள்ள சிம்பு, தற்போதுதான் என்னுடைய ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.