ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சின்னத்திரையின் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் திருச்செல்வம், தேவயானி நடித்த கோலங்கள், கைராசி குடும்பம் உள்பட பல தொடர்களை இயக்கி உள்ளார். தற்போது பல தொடர்களில் நடித்தும் வருகிறார்.
திருச்செல்வத்தின் சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் பேராவூரணி. சொந்த வேலையாக காரில் பேராவூரணி சென்ற திருச்செல்வம் நேற்று அங்கிருந்து சென்னைக்கு திரும்பி வந்து கொண்டிந்தார். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே சென்று கொண்டிருந்தபோது காருக்கு முன்னே சென்ற ஒரு ஆட்டோ திடீரென பிரேக் போட்டு நின்றதால் வேகமாக சென்ற திருச்செல்வத்தின் கார் ஆட்டோவின் மீது மோதியது. இதனால் ஆட்டோ சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் விழுந்தது. திருச்செல்வத்தின் கார் டிரைவரின் சாமர்த்தியத்தால் பள்ளத்தில் பாயாமல் தப்பியது.