இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய பாலசமுத்திரம் பகுதி விவசாயிகள் நடிகர் மாதவன் மீது பரபரப்பு புகார்களை கூறினர். அவர்கள் அங்கு பேசியதாவது: கொடைக்கானல் மலையிலிருந்த பழனி பகுதி கண்மாய்களுக்கு தேக்கன் தோட்டம் பகுதி வழியாக செல்லும் டிடிஎல் பாசன வாய்க்கால் மூலமாகத்தான் தண்ணீர் வருகிறது. இந்த கால்வாய் நீரைக்கொண்டு தேக்கன் தோட்டம் பகுதியில் 50 ஏக்கர் நிலம் பாசனம் பெற்று வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் நடிகர் மாதவன் 7 ஏக்கர் நிலம் வாங்கினார். அந்த இடத்தின் அருகில் உள்ள நாங்கள் பயன்படுத்தும் களம், புறம்போக்கு பாதை நிலத்தையும் மாதவன் தரப்பினர் ஆக்கிரமித்து கொண்டனர். பாசன கால்வாயையும் மறித்து மின்வேலி அமைத்துள்ளனர். எங்கள் நிலத்தை அவர்களுக்கு விற்கச் சொல்லி மாதவன் ஆட்கள் மறைமுகமாக நெருக்கடி கொடுக்கிறார்கள். எனவே மாதவன் மீதும், அவருக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர். இது தொடர்பாக விசாரணை நடத்த வருவாய் துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.