அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? |
இசைஞானி இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜாவின் இசையில் விரைவில் நடைபெற இருக்கும் "பட்டணத்தில் பூதம்" இசை நாடகத்தி்ல், தனித்திறமையுள்ளவர்கள் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதற்கான கதையை கார்த்திக் ராஜாவே எழுதியுள்ளார். வசனத்தை, பா.விஜய் எழுதியுள்ளார். இந்த நாடகத்தின் உடை அலங்காரங்களை, வாசுகி பாஸ்கர் மேற்கொள்ள உள்ளார். இந்த நாடகத்தில், நாசர், அவரது மகன் லுத்பூதீன் பாஷா, பிரசன்னா, நந்தினி ரவீந்திரன், பாடகர்கள் ராகுல் நம்பியார், ஹரீஷ் மற்றும் பாடகி சின்மயி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இந்த நாடகம் குறித்து, கார்த்திக் ராஜா சமீபத்தில் கூறியிருந்ததாவது, பட்டணத்தில் பூதம் நாடகம், குழந்தைகளுக்கான நாடகம் ஆகும். இதற்கான ஒத்திகை தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது. நான் சிறுவனாக இருக்கும்போதே, அலாவுதீனும் அற்புத விளக்கும் படத்தை பார்த்து வியப்படைந்துள்ளேன். அதில் வரும் அனைத்து காட்சிகளும் எனக்கு மிகவும் பிடிக்கும். அப்சல்யூட் மேஜிக் என்ற பெயரில், கடந்த ஆண்டு தயாரிப்பு நிறுவனம் துவக்கியிருந்தோம். முதல்நிகழ்ச்சியாக, மதுரையில், அப்பா இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை நடத்தினோம். இந்த ஆண்டு புதிதாக, ஏதாவது செய்ய வேண்டும் என்பதனடிப்படையில், இந்த குழந்தைகள் நாடகத்தை நடத்த உள்ளோம். இந்த நாடகம், சென்னை மியூசிக் அகாடமியில், செப்டம்பர் 16ம் தேதி பிரீமீயர் ஷோவும், அதனைத்தொடர்ந்து, செப்.,.18 முதல் 20ம் தேதி வரை நாடகம் நடத்தப்பட உள்ளது என்று கூறினார்.
முன்னணி நட்சத்திரங்கள் மட்டுமல்லாது, தனித்திறமைகள் கொண்ட அனைவரும் இதில் பங்கேற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆடிசன், செப்டம்பர் 2 மற்றும் 3ம் தேதிகளில், சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற உள்ளது.