ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பரதேசி படம் அதர்வாவுக்கு ஒரு அடையாளமாக அமைந்தது. என்றபோதும் ஒரு ஹீரோவாக அவருக்கு அந்த படம் நிலையான இடத்தை பிடித்துக் கொடுக்கவில்லை. அது டைரக்டர் பாலாவின் படமாகிவிட்டது. அதனால் சற்குணம் இயக்கத்தில் நடித்த சண்டிவீரன் படத்தை பெரிதாக எதிர்பார்த்திருந்தார் அதர்வா. டைரக்டர் பாலா ஓகே செய்த கதை என்பதால் பெரிய எதிர்பார்ப்புடன் அப்படத்தில் நடித்தார் அதர்வா. ஆனால் அந்த படமும் பெரிதாக கைகொடுக்கவில்லை. இந்த நிலையில்தான் தற்போது வானவராயன் வல்லவராயன் படத்தைய இயக்கிய ராஜமோகன் இயக்கும் ருக்குமணி வண்டி வருது என்ற படத்தில் நடிக்கிறார் அதர்வா. இந்த படமும் சண்டிவீரன் போன்று பக்கா கிராமத்து படம். ஆனால் அதிக நம்பிக்கை வைத்த படங்கள் தன்னை ஏமாற்றி விட்டதால், இந்த படத்தைப்பற்றி பெரிதாக எதுவும் சொல்லாமல் அமைதியாக நடித்துக்கொண்டிருக்கிறார் அதர்வா.
மேலும், அவரது நடிப்பில் ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கும் ஈட்டி, கணிதன் ஆகிய இரண்டு படங்களில் ஈட்டி விரைவில் வெளிவர தயாராகிக்கொண்டிருக்கிறது. இப்படம் பற்றி இயக்குனர் ரவி அரசு கூறுகையில், அதர்வாவுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ள இந்த படத்தில் தடகள ஓட்டப்பந்தய வீரராக நடித்துள்ளார் அதர்வா. படத்தில் காதல், காமெடி என கமர்சியல் அயிட்டங்களும் தேவையான அளவு உள்ளது. அதனால் இந்த படம் அதர்வாவுக்கும், எனக்கும் ஒரு ஹிட் படமாக இருக்கும் என்று கூறும் டைரக்டர் ரவி அரசு, படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய தயாராகிக்கொண்டிருப்பதாக கூறுகிறார்.