‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
ஜெயம் படத்தில் இருந்து தனது சினிமா கேரியரை தொடங்கியவர் டைரக்டர் ராஜா. அதே படத்தில்தான் அவரது தம்பியான ரவியும் நாயகனாக அறிமுகமானார். அந்த படம் சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து அவர்கள் இருவரது பெயருக்கு முன்பும் ஜெயம் ஒட்டிக்கொண்டதால் ஜெயம்ராஜா- ஜெயம் ரவியாக பல படங்களை இயக்கினர். ஆனபோதும் தான் இயக்கிய அனைத்து படங்களையும் ஏற்கனவே வெளியான கதைகளில் அதாவது ரீமேக் படங்களாகத்தான் இயக்கினார் ஜெயம்ராஜா.
அந்த வகையில், எம்.குமரன் சன்ஆப் மகாலட்சுமி, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், தில்லாலங்கடி, வேலாயுதம் என எல்லா படங்களையும் தெலுங்கில் ஹிட்டான படங்களை ரீமேக் செய்தார். ஆனால், தற்போது ஜெயம்ரவியை வைத்து அவர் இயக்கி வெளியாகியுள்ள தனி ஒருவன் படத்தை தானே சொந்தமாக கதை தயார் செய்து இயக்கியிருக்கிறார் ஜெயம்ராஜா. அதோடு இந்த படத்தில் இருந்து தனது பெயரையும் மோகன்ராஜா என்று மாற்றியிருக்கிறார் அவர்.
இந்த தனி ஒருவன் படத்தின் பிரஸ்ஷோ நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது பத்திரிகையாளர்கள் முன்பு பேசிய டைரக்டர் மோகன்ராஜா, நான் டைரக்டராகி 12 வருடங்களில் இதுவரை ரீமேக் படங்களாகவே இயக்கினேன். ஆனால் வேலாயுதம் படத்திற்கு பிறகு 3 வருடங்களாக அடுத்து சொந்தமாகவே கதை ரெடி பண்ணி இயக்க வேண்டும் என்று அதற்கான முயற்சிகளில் இறங்கினேன். அந்த வகையில், எனக்கு கைகொடுத்தது பத்திரிகை செய்திகள்தான். பத்திரிகைகளில் வெளியான செய்திகளை ஆதாரமாகக்கொண்டே இந்த படத்திற்கான கதையை ரெடி பண்ணினேன்.
அந்த வகையில் இது நான் யாரையும் காப்பியடிக்காமல், ரீமேக் செய்யாமல் நேரடியாக இயக்கியுள்ள முதல் படம். இதற்கு தியேட்டர் ரெஸ்பான்ஸ் நன்றாகவே உள்ளது. அதனால் நீங்களும் ஆதரவு கொடுங்கள் என்று பேசினார்.