மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தனக்கேற்ற கதையை தேர்ந்து எடுத்து நடிப்பதில்விஜய் ஆண்டனிக்கு நிகர் அவர் ஒருவரே.அதை தவிர அவர் படத்தின் தலைப்பும் அனைவரையும் ஈர்க்கும் .அவர் தற்போது நடித்து , இசை அமைத்து வரும் புதிய படமான பிச்சைகாரன் கூட மேற்கூறிய காரணங்களுக்காக பெரிதும் பாராட்டப்படுகிறது. பிச்சைக்காரன் படத்தை பற்றி விஜய் ஆண்டனி கூறியதாவது ... நம் ஒவ்வொருக்குள்ளும் ஒரு பிச்சைக்காரன் ஒளிந்து இருக்கிறான்.பிச்சையின் தன்மை தான் வேறுபடுகிறது.இயக்குனர் சசியுடன் சந்தர்ப்ப வசமாக நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு முறை சந்திக்க நேரிட்டது.அவருடன் நான் ஏற்கனவே டிஷ்யூம் படத்தில் இசை அமைப்பாளராக பணியாற்றி உள்ளேன்.அவருடைய இயக்கத்தில் வெளி வந்த சொல்லாமலே , ரோஜா கூட்டம் , டிஷ்யூம்,பூ , 555 படங்களின் மூலம் என்னை மிகவும் கவர்ந்த இயக்குனர் ஆவார் சசி.அவருடன் ஒரு நடிகராக பணியாற்ற வேண்டும் என்ற என் ஆசையின் பின்னணியில் அவரிடம் இப்படி ஒரு கதை இருப்பதாக சொன்னவுடன் உடனடியாக நேரம் ஒதுக்கி கதை கேட்டேன். மூன்று மணி நேரத்துக்கும் மேல் கதைக் கேட்டு எனக்கு சிறிதளவும் அயர்ச்சி ஏற்படவில்லை. அவ்வளவு யதார்த்தம் , அவ்வளவு வேகம். உடனடியாக எப்ப ஆரம்பிக்கலாம் எனக் கேட்டேன்.சிரித்துக் கொண்டே எப்ப வேணும்னாலும் என்று சொன்னவர் தலைப்பு ஓகே வா எனக் கேட்டார். வளர்ந்து வரும் நடிகரான உங்களுக்கு இது எதிர் மறையாக போய் விடுமோ என்று தன் அச்சத்தை வெளிப்படுத்தினார்.ஆனால் நான் இந்த தலைப்பு தான் வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்து அவரை ஒப்பு கொள்ள வைத்தேன். இதுவரை எந்த ஒரு ஹீரோவும் இத்தகைய கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததில்லை என்பதும் எனக்கு உந்துதல் ஆக இருந்தது.நான் நடிகன் ஆக வேண்டும் என முடிவெடுத்த நாளே இமேஜ் வட்டத்துக்குள் சிக்கி விடக் கூடாது என்பதில் தீவிரமாக முடிவெடுத்து விட்டேன்.
படம் பார்க்க வரும் ரசிகர்கள் இரண்டரை மணி நேரம் பொழுதை போக்க வேண்டும் , அவர்கள் மன நிறைவோடு அரங்கை விட்டு வெளியேற வேண்டும் என்பது மட்டுமே நடிகனாக என்னுடைய இலக்கு.அந்த வகையில் பிச்சைக்காரன் நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும்.இதில் எனக்கு இணையாக நடித்து இருப்பவர் புது முகம் சட்னா டைட்டஸ் ,என்னுடைய அபிப்ராயத்தில் அவர் நிச்சயமாக ஒரு வலம் வருவார் என சொல்லுவேன்.