தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
டோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகரான மஞ்சு விஷ்ணு திரைத்துறை தாண்டி பல சமூக சேவைகளையும் செய்து வருகின்றார்.இந்திய அரசு அறிவித்த பள்ளிக்கூடங்களில் மாணவிகளுக்கு தனி கழிவறை கட்டும் திட்டத்திற்கு ஆதரவு அளித்த மஞ்சு விஷ்ணு பல அரசு பள்ளிகளில் கழிவறைகள் கட்டிக் கொடுத்தார். தற்போது தனது சொந்த மாவட்டத்தில் 10 கிராமங்களை தத்தெடுக்க மஞ்சு விஷ்ணு முடிவு செய்துள்ளார். தனது திட்டம் குறிந்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாய்டுவிடம் பேசவும் மஞ்சு விஷ்ணு திட்டமிட்டுள்ளார்.இது குறித்து கூறிய மஞ்சு விஷ்ணு தனது சொந்த மாவட்டமான சித்தூரில் உள்ள சந்திரகிரி மண்டலத்தைச் சேர்ந்த 10 கிராமங்களை தத்தெடுக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.அடிப்படை வசதிகள் இல்லாத கிராமங்களில் தண்ணீர்,கல்வி போன்ற அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யப் போவதாகவும் மஞ்சு விஷ்ணு கூறியுள்ளார். மேலும் பல அரசு பள்ளிகளிலும் மாணவிகளுக்கு தனி கழிவறைகளைக் கட்டிக் கொடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக மஞ்சு விஷ்ணு தெரிவித்துள்ளார்.