தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கன்னட திரை உலகில் முன்னணி நடிகராக விளங்கிய சுதீப்பை நான் ஈ படத்தின் வாயிலாக தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகிற்கு இயக்குநர் ராஜமௌலி அறிமுகப்படுத்தினார். நான் ஈ படத்தின் வாயிலாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த சுதீப்பை நான் ஈ படம் பார்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்களும் பாராட்டினர். இப்படத்தை தொடர்ந்து தமிழிலும் தெலுங்கிலும் நட்சத்திர அந்தஸ்து கொண்ட நடிகராக மாறிவிட்ட சுதீப் ராஜமௌலி இயக்கிய பாகுபலி படத்தில் நடித்திருந்தார்.தற்போது நடிகர் விஜய்யுடன் புலி படத்தில் நடித்துள்ளார். கன்னட படங்களிலும் பிசியாக நடித்து வரும் சுதீப் ராஜமௌலி போன்று தானும் ஒரு சரித்திர திரைப்படத்தை ஐந்து மொழிகளில் இயக்க விருப்பம் கொண்டுள்ளதாக கூறியுள்ளார். ராஜமௌலியின் மனம் கவர்ந்த நடிகர்களில் ஒருவரான சுதீப் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிப்பார் என படப்பிடிப்பு தள தகவல்கள் தெரிவிக்கின்றன.