பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சில தினங்களுக்கு முன் கேரளாவில் திருவனந்தபுரத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் ஓணம் கொண்டாட்டத்தின்போது, சில மாணவர்கள் குடித்துவிட்டு ஜீப் ஓட்டியதில் கல்லூரி மாணவி ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். 'பிரேமம்' பட பாணியில்; மாணவர்கள் இந்த ரகளையில் ஈடுபட்டதாக, கேரள டிஜிபி முதல் பல சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் இந்நிகழ்வை கண்டித்து விமர்சித்து வருகின்றனர்.. ஆனால் ரஞ்சனி ஹரிதாஸ் என்கிற நடிகை மட்டும் பிரேமம்' படத்திற்கு ஆதரவாகவும் மாணவர்களுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்துள்ளார்..
மலையாளத்தில் சின்னத்திரை தொகுப்பாளராக பணிபுரியும் இந்த ரஞ்சனி ஹரிதாஸ், ஒருசில படங்களிலும் தலைகாட்டியுள்ளார். அதுமட்டுமல்ல, சர்ச்சைகளுக்கும் என்றுமே பஞ்சம் இல்லாதவர். குறிப்பாக பிராணிகள் மீது அளவற்ற பிரியம் கொண்டவர். சமீபத்தில் ஒரு கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட இவர், டாக்டர் ஒருவர் பேசிக்கொண்டிருக்கும்போதே மைக்கை பிடுங்கியதாக சர்ச்சையில் சிக்கியவர். இவர்தான் தற்போது விபத்தை ஏற்படுத்திய மனித மிருகங்களுக்காகவும் குரல் கொடுத்துள்ளார்..