பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
சிம்பு நடித்த போடாபோடி படத்தில் பாலே டான்சராக நடித்தவர் வரலட்சுமி. அதன்பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த மதகஜராஜா படத்தில் அஞ்சலியுடன் இணைந்து இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்தார். ஆனால் அந்த படம் திரைக்கு வரவில்லை. இந்த நிலையில்தான், பாலாவின் தாரைத் தப்பட்டை படத்திற்காக கமிட்டானார் வரலட்சுமி. இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக கரகாட்டக்காரியாக நடித்துள்ளார் அவர். இந்த படவாய்ப்பு வரலட்சுமிக்கு கிடைக்க முக்கிய காரணம் அவரது பாலே நடனம்தான். நடனத்தில் அவர் தேர்ச்சி பெற்றவராக இருந்ததால்தான் அவரால் கரகாட்டத்தை எளிதில் பயிற்சி எடுத்துக்கொள்ள முடியும் என்று அவரை புக் பண்ணினார் பாலா. அதோடு, சசிகுமார்-வரலட்சுமி இருவருக்குமே பல மாதங்களாக அவர் கரகாட்ட பயிற்சி கொடுத்த பின்னர்தான் நடிக்க வைத்தார். அதோடு, வரலட்சுமியை இரண்டுவிதமான கோணங்களில் படத்தில் காட்டுகிறாராம் பாலா.
அந்த வகையில், அவர் கரகாட்டக்கரியாக இருக்கும்போது ஸ்லிம்மாகவும், அதன்பிறகு உடல் எடையை அதிகப்படுத்தியும் இரண்டுவிதமாக நடித்திருக்கிறார். அந்த வகையில், இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் பெருத்து, இடை சிறுத்து என இரண்டுவிதமான கெட்டப்பில் அனுஷ்கா நடித்திருப்பது போன்று இந்த படத்தின் கதைக்கேற்ப வரலட்சுமியும் எடை குறைத்து, அதிகப்படுத்தி என நடித்திருக்கிறார். அதோடு முதல் இரண்டு படங்களிலும் கவர்ச்சிகரமான கதாநாயகியாக நடித்த வரலட்சுமியை இந்த படத்தில் அழுத்தமான காட்சிகளிலும் நடிக்க வைத்திருக்கிறாராம் பாலா. அதனால், தாரைத்தப்பட்டை வரலட்சுமி பக்கா பர்பாமென்ஸ் நாயகியாக வெளிப்படுத்தும் என்கிறார்கள்.