தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரபல பாடகர் யேசுதாசின் மகன் விஜய் யேசுதாஸ், பாடகராக இருந்து, 'மாரி' திரைப்படத்தின் மூலம் நடிகராக, புது அவதாரம் எடுத்துள்ளார்.
அவருடன் ஒரு சந்திப்பு:
பாடகராக இருந்து நடிகராக மாறியது ஏன்?
சூழ்நிலை தான் காரணம்; முழுமையாக நடிக்க போய் விட்டேன் எனக் கூற முடியாது. இப்போது தான் ஒரு படத்தில் நடித்திருக்கிறேன். மேடை அனுபவத்தை விட,
படப்பிடிப்பு தளத்தில் நடந்த, கிடைத்த அனுபவங்கள் வித்தியாசமாக இருந்தன.
நீங்கள் நடிக்க வந்தது குறித்து, அப்பா ஏதாவது கூறினாரா?
அப்பா அறிவுரையாக ஏதும் சொல்லவில்லை; ஆனால், ஒரு சில விஷயங்களை தெளிவாக கூறினார். 'உன் விருப்பப்படி எது வேண்டுமானாலும் முயற்சி எடுத்து செய்; ஆனால், இசை சங்கீதத்தை விட்டு விடாதே' என்றார். எனவே, நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், சங்கீதம் மற்றொரு பக்கம் இருக்கும்.
நடிப்பதற்கு, தனுஷ் எந்த அளவிற்கு உதவியாக இருந்தார்?
'மாரி' படத்தில், நானும், அவரும் நடிக்கும் காட்சிகளில், நிறைய 'டிப்ஸ்' கொடுத்தார். பல விஷயங்களை அவரிடம் கற்றுக் கொண்டேன்.
இளம் இசையமைப்பாளர்கள் சினிமாவில் சாதிப்பது பற்றி...
ரொம்ப சந்தோஷமாக இருக்கு. நிறைய புது திறமையாளர்கள் வர வேண்டும்; அப்போது தான் இன்னும் அடுத்த கட்டத்திற்கு, சினிமாவை எடுத்துச் செல்ல முடியும். 'சின்ன பசங்க, 'ஈசி'யாக ஜெயிச்சுடுறாங்க' என, யாரும் நினைக்கக் கூடாது. எல்லாருமே, போராடித் தான் உயர்ந்த இடத்துக்கு வந்துள்ளனர்.
இசை அமைக்க ஆர்வம் இருக்கா?
இதுவரைக்கும் அதுபோன்ற திட்டம் எதுவும் இல்லை. மலையாளம், தமிழில் சில வாய்ப்புகள் வருகின்றன. நடிப்பு, இசை எதுவாக இருந்தாலும், அவசரப்படாமல் யோசித்து தான் நான் முடிவு எடுப்பேன்.
அப்பா பாடிய பாடல்களில், உங்களுக்கு பிடித்தவை?
'கண்ணே கலைமானே, தென்றல் வந்து என்னைத் தொடும்' இதுபோன்ற பல பாடல்கள், என் மனதில் அப்படியே பதிந்து போனவை.
மைக் முன் நிற்பது; கேமரா முன் நிற்பது; என்ன வேறுபாடு?
மைக் முன் நிற்கும்போது, கொஞ்சம் டென்ஷன் இருக்கும். எந்த பாடலை, எப்போது பாடினாலும், முதல்முறை பாடுவது போல் தான் பாடுவேன். அனுபவம் இருந்தாலும், லேசான பயம் இருக்கும். கேமரா முன் நிற்பதை விட, உடல் அசைவுக்கு ஏற்ற மாதிரி வசனங்கள் பேசுவது தான் ரொம்ப சிரமமாக இருந்தது.
தொடர்ந்து நடிப்பீங்களா?
நல்ல கதைகள் அமைந்தால் யோசிப்பேன்.