ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் |
யாராவது ஒருவர் புதிய முயற்சி செய்தால் அதை பின்பற்றி பலரும் அதையே செய்வார்கள். எஸ்.எஸ்.ராஜமௌலி பாகுபலி படத்தை இரண்டு பாகங்களாக எடுக்கத் திட்டமிட்டு, அதன் முதல் பாகத்தை முடித்து வெளியிட்டார். அப்படம் 50 ஆவது நாளை எட்டவிருக்கிறது. தென்னிந்தியாவின் அதிக வசூல் குவித்த படம் என்ற பெருமையையும் பாகுபலி படம் தட்டிச் சென்றிருக்கிறது. பிரம்மாண்டமாக உருவான இப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, 2016ல் பாகுபலி படத்தின் 2ம் பாகம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று தனுஷ் நடிக்கவிருக்கும் வடசென்னை படத்தையும் இரண்டு பாகங்களாக எடுக்கவிருக்கிறார்கள்.
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இப்படத்திற்காக 250 நாட்களுக்கும் மேல் தனுஷ் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.
இப்படத்தை தனுஷே தயாரிக்கிறார். வேல்ராஜ் இயக்கத்தில் விஐபி-2 படத்தில் நடித்து முடித்துவிட்ட தனுஷ் தற்போது, பிரபுசாலமன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த இரண்டு படங்களை முடித்துவிட்டு காக்கி சட்டை பட இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கவிருக்கிறார் தனுஷ். இந்த படங்களை எல்லாம் முடித்து கொடுத்துவிட்டு 2016 ல் வடசென்னை படத்தின் படப்பிடிப்பில் முழுமையாக கவனம் செலுத்த இருக்கிறார்.