டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாலா இயக்கும் படம் எப்போது ஆரம்பிக்கும் என்பதை மட்டுமின்றி எப்போது முடியும் எப்போது ரிலீஸ் ஆகும் என்பதையும் யாராலும் கணிக்க முடியாது.
யாராலும் என்பதில் பாலா படத்தின் தயாரிப்பாளரும் அடக்கம். நந்தா படத்தை பாலா இயக்கியபோது தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்ட அப்படத்தின் தயாரிப்பாளர், சீக்கிரமாக படத்தை முடிக்கும்படி பாலாவை கேட்க, பாலா கடுப்பானது கடந்த கால வரலாறு. வருடங்கள் பல கடந்தும் பாலாவின் அணுகுமுறையில் மாற்றம் இல்லை. பரதேசி படத்திற்குப் பிறகு பாலா இயக்கி வரும் படம் தாரை தப்பட்டை. இப்படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார். தாரை தப்பட்டை படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் தஞ்சாவூரில் தொடங்கியது. கிட்டத்தட்ட 1 வருடத்திற்கும் மேலாகியும் தாரை தப்பட்டை படம் முடிவடையாமல் இழுத்துக் கொண்டிருந்தது. சசிகுமாருக்கு ஏற்பட்ட விபத்தை காரணம் சொல்லி நாட்களை கடத்தினார்.
இந்தப் படத்தை நம்பி வேறு படங்களில் நடிக்காமல் இருந்த சசிகுமார் தாரை தப்பட்டை படத்தை முடித்து விரைவில் ரிலீஸ் செய்யும்படி பாலாவை நச்சரிக்க ஆரம்பித்துள்ளார். அவரது நச்சரிப்பு காரணமாகவோ என்னவோ தனது பி ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் தயாரித்த தாரை தப்பட்டை படத்தை சசிகுமாரை தயாரிக்கும்படி சொல்லிவிட்டார் பாலா. அதன் பின்னர் சசிகுமாரின் முயற்சியில் தாரை தப்பட்டை படத்தின் கடைசி ஷெட்யூலை தஞ்சாவூரில் நடத்தி படப்பிடிப்பை முடித்துள்ளார் பாலா.