ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் - ஸ்ருதிஹாசன் நடிக்கும் 'புலி' படம் செப்டம்பர் 17 அன்று வெளியாவதாக இருந்தது. கிராபிக்ஸ் பணிகள் முடிவடையவில்லை என்பதால் பட ரிலீஸை செப்டம்பர் 17-ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 1-ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர். புலி படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் உற்சாகமடைந்த பல தயாரிப்பாளர்கள் தங்களின் படங்களை களத்தில் இறக்குகின்றனர். எனவே செப்டம்பர் 17-ல் பல படங்கள் ரிலீசாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. லிங்குசாமி தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த 'ரஜினி முருகன்' படத்தை விநாயக சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 17-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு ஏற்கனவே அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் லிங்குசாமி உடன் மோதி வரும் ஞானவேல்ராஜா, ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தை செப்டம்பர் 17 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு தியேட்டர்களை புக் பண்ணி வருகிறார். உனக்கு என்ன வேணம் சொல்லு என்ற ஹாரர் படமும் இதே நாளில் திரைக்கு வருகிறது. இந்த படங்கள் தவிர கவுண்டமணி கதாநாயகனாக நடித்துள்ள '49-ஒ' படத்தை செப்டம்பர்-17 அன்றே வெளியிடவிருப்பதாக அப்படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த 4 படங்களின் ரிலீஸ் உறுதியாகியுள்ள நிலையில் வேறு சில படங்களும் களத்தில் குதிக்க வாய்ப்பு இருக்கிறது என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.