தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நகைச்சுவை நடிகராகவே அறியப்பட்ட மலையாள காமெடி நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடுவுக்கு, தான் இயக்கிய 'பேரறியாதவர்' என்கிற படத்தில் குணச்சித்திர வேடத்தை அளித்து, அதன் மூலம் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக, அவருக்கு 2013க்கான சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுத்தந்தவர் இயக்குனர் பைஜூ. ஆனால் இந்தக்கதை உண்மையில் திலீப்பை மனதில் வைத்து அவர் எழுதியது.. கதையில் மார்க்கெட் வேல்யூ இல்லை என திலீப் மறுத்துவிட, அந்த வாய்ப்புதான் நகைச்சுவை நடிகரான சுராஜ் வெஞ்சாரமூடுக்கு போனது. அவருக்கு தேசிய விருதும் பெற்றதந்தது.. இது கடந்த வருடத்தில் கேரளாவின் சென்சேஷனல் செய்தியாக இருந்தது.
இப்போது குஞ்சாக்கோ போபனை வைத்து 'வலிய சிறகுள்ள பக்ஷிகள்' என்கிற படத்தை இயக்கி முடித்துவிட்ட பைஜூ, அடுத்ததாக தான் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்க நிவின்பாலியிடம் கால்ஷீட் கேட்டார்.. இவரது படத்தில் நடிக்காமல் போய், திலீப் தேசிய விருதை தவறவிட்டதை ஏற்கனவே அறிந்திருந்த நிவின்பாலி, பைஜூ கேட்டதுமே உடனே ஒகே சொல்லிவிட்டார். அதுமட்டுமல்ல, நிவின்பாலியும் தற்போது கேரள அரசு விருது பெற்றார் இல்லையா.. அதுவும் கூட சம்மதம் சொல்ல ஒரு காரணமாம். முக்கியமான சமூக பிரச்சனை ஒன்றை மையமாக வைத்து இந்தப்படம் உருவாக இருக்கிறதாம்.