ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஒரு காலத்தில் சுமை, பட்டம் பறக்கட்டும், சிவப்புமல்லி போன்ற அற்புதமான படங்களை இயக்கியவர் ராமநாராயணன்.
பிறகு வியாபாரரீதியிலான படங்களை இயக்குவதிலும் தயாரிப்பதிலும் ஆர்வம் காட்ட ஆரம்பித்து பக்திப் படங்களை தயாரித்து வெளியிட்டு லாபம் சம்பாதித்தார்.
ராம நாராயணனின் மறைவுக்குப் பிறகு அவரது மகன் நிர்வகித்து வரும் ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தற்போது பேய்ப்படங்களை வாங்கி வெளியிட்டு மிகப்பெரிய அளவில் லாபம் சம்பாதித்து வருகிறது. கடந்த வருடம் வெளியான அரண்மனை, பிசாசு ஆகிய இரண்டு பேய்ப் படங்களையும் இந்நிறுவனம்தான் வாங்கி வெளியிட்டது. இரண்டு படங்களுமே சூப்பர்ஹிட்டாகின. இந்த வருடத்தின் மிகப்பெரிய வெற்றிப்படமான காஞ்சனா 2 படத்தையும் ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனமே வாங்கி வெளியிட்டது. சுமார் 30 கோடி லாபம் சம்பாதித்ததாக சொல்லப்படுகிறது. காஞ்சனா-2 படத்தை அடுத்து அருள்நிதி நடிப்பில் வெளியான டிமான்ட்டி காலனி படத்தை வெளியிட்டது. இந்தப்படமும் பெரிய லாபம் தந்தது. நயன்தாரா கதாநாயகியாக நடித்திருக்கும் மாயா படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையையும் ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனமே வாங்கி உள்ளது. இதுவும் பேய்ப்படம்தான். இப்படம் விரைவில் வெளிவரவிருக்கிறது. மாயாவைத் தொடர்ந்து பா.விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ஸ்ட்ராபெர்ரி படத்தையும் ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனமே வெளியிடவிருக்கிறது. இதுவும் ஒரு பேய்ப்படம்தான்.