தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் |
சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் பேசிய பார்த்திபன், கூவத்தில் உள்ள கழிவுகளை உலரவைத்து உரமாக மாற்றி விவசாயத்துக்கு பயன்படுத்தலாம். அதற்கான திட்டம் ஒன்றை வைத்திருக்கிறேன். மாநகராட்சி மேயரை சந்தித்து ஆலோசிக்க உள்ளதாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி பார்த்திபனை சந்திக்க விரும்பினார்.
இதைத் தொடர்ந்து பார்த்திபன் நேற்று மாநகராட்சி மேயர், மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து பேசினார். அப்போது கூவத்தை சுத்தப்படுத்த தன்னிடம் உள்ள திட்டத்தை எடுத்துக் கூறினார். பின்னர் சந்திப்பு குறித்து குறித்து பார்த்திபன் நிருபர்களிடம் கூறியதாவது:
கூவத்தில் உள்ள கழிவுகள் நச்சுத் தன்மை கொண்டவை அவற்றை அகற்றி எங்கே கொட்டுவது என்பதுதான் தற்போதுள்ள பிரச்சினை. கூவத்தின் கழிவுகளை உலரவைத்து பதப்படுத்தி உரமாக மாற்றலாம் என்ற திட்டத்தை கூறினேன். அதிகாரிகளும் அதை ஏற்றுக் கொண்டனர். சோதனை முயற்சிக்காக மரக்காணம் அருகே உள்ள எனக்கு சொந்தமான இடத்தில் கூவத்தின் கழிவுகளை கொண்டு வந்து கொட்டினால் அதனை உரமாக மாற்றித் தருவதாக சொல்லியிருக்கிறேன். இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இருக்கிறேன். என்றார் பார்த்திபன்.