'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
தமிழ் நாட்டில் உள்ள கோவிலின் உட்புறங்களில் சினிமா படப்பிடிப்பு உள்ளிட்ட எந்த படப்பிடிப்பும் நடத்தக்கூடாது என்ற சட்டம் அமலில் உள்ளது. சில கோவில்களில் மட்டுமே இந்த சட்டம் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆனால் பெரும்பாலான கோவில்களில் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத பிற கோவில்கள் சினிமா படப்பிடிப்பால் தனி வருமானம் கிடைப்பதால் தாராளமாக அனுமதி வழங்குகிறது. தமிழ்நாட்டு கோவில்களில் படப்பிடிப்புக்கு அனுமதி வாங்குவதில் சிரமம் இருப்பதால் பல தமிழ் படப்பிடிப்புகள் ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் உள்ள கோவில்களில் படமாகிறது. "தமிழ் மக்களின் வாழ்க்கையில் கோவில்கள் தவிர்க்க முடியாத ஒரு அங்கம். அவர்களின் வாழ்க்கையை சொல்லும்போது கோவில் இல்லாமல் எப்படிச் சொல்ல முடியும். எனவே கோவிலில் படப்பிடிப்பு நடத்த விதித்திருக்கும் தடையை நீக்க வேண்டும்" என்று ஒரு பிரிவினர் கூறுகிறார்கள். "தேவலாலயங்களுக்குள் படப்பிடிப்பு நடத்த அந்த மதத்தினர் எந்த தடையும் விதிப்பதில்லை" என்றும் அவர்கள் கூறுகிறார்கள்."கோவில்கள் புனிதமானவை. அங்கு சினிமா என்ற பெயரில் ஆடல் பாடல் காட்சிகளும், காதல் காட்சிகளும் படமாக்குவது அதன் புனிதத்தை கெடுப்பது போன்றது. அதை அனுமதிக்ககூடாது" என்றும் ஒரு சாரார் கருத்து தெரிவிக்கிறார்கள்.கோவிலுக்கு உள்ளே படப்பிடிப்பு நடத்த அனுமதிக்காவிட்டாலும் கோவிலின் வெளிபிரகாரங்களில் நடத்தலாம். கதைக்கு அவசியமான காட்சிகளுக்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும். அந்த காட்சிகள் கோவிலின் புனிதத்தை கெடுக்காத அளவிற்கு இருக்க வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் காதல் காட்சிகள், டூயட் பாடல்கள், குத்துபாடல்கள் எடுக்க அனுமதிக்க கூடாது என்ற பொதுவாக எல்லோரும் கருதுகிறார்கள்.