இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் |
சாதாரணமாக, பார்த்து பேசி பழகி மெல்ல மெல்ல வருவதுதான் காதல் என்பார்கள். ஆனால் சிம்பு விஷயத்தில் அப்படியில்லை, கண்டதும் காதல் போன்று உடனே காதல் வயப்படுவார். அந்த வகையில், வல்லவன் படத்தில் நடித்தபோது நயன்தாராவை காதலித்தார். ஆனால் அந்த காதல் எத்தனை சீக்கிரத்தில் வந்ததோ அதே வேகத்தில் அதாவது இரண்டே மாதத்தில் முறிந்து போனது. அதேபோன்றுதான், வாலு படத்தில் நடித்தபோது ஹன்சிகாவுடன் காதல் வயப்பட்டார். ஆனால் அதுவும் அந்த படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே முறிந்து விட்டது.
இருப்பினும், பின்னர் அதே வாலு படத்தில் ஹன்சிகாவுடன் நடித்தார் சிம்பு. காதல் முறிவுக்குப்பிறகு அவர் நடிக்க மறுத்தபோதும் பேச்சுவார்த்தை நடத்தி தொடர்ந்து அவரை நடிக்க வைத்தார். இந்த நிலையில், அந்த படத்திற்கு முன்பே ஹன்சிகாவுடன் இணைந்து சிம்பு நடித்து கிடப்பில் போடப்பட்டிருந்த வேட்டை மன்னன் படமும் தற்போது தூசு தட்டப்படுகிறது. அதனால் மீண்டும் ஹன்சிகாவுடன் சிம்பு நடிக்கயிருக்கிறார்.
ஆனால் இதுபற்றி இன்னும் ஹன்சிகாவிடம் பேசவில்லை. அப்படி பேசும்போது, ஹன்சிகா ஓகே சொல்வாரா? இல்லை மறுப்பாரா? என்று தெரியவில்லை. காரணம், வாலு படத்திற்கு ஹன்சிகா கொடுத்த கால்சீட்டை வீணடித்து விட்டு மீண்டும் மீண்டும் அவரிடம் கால்சீட் கேட்டபோது, டீலில் விட்டார். அதனால் வேட்டை மன்னனுக்கு அவர் கொடுத்திருந்த கால்சீட் எப்போதோ தீர்ந்து விட்ட நிலையில், இப்போது ஹன்சிகா என்ன பதில் சொல்லப்போகிறார் என்பது தெரியவில்லை.