டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
குழந்தைகளை தாக்கும் மிக கொடிய நோய், தசை திசைவு நோய். இந்த நோய்க்கு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நோயை ஆரம்ப நிலையில் கண்டறியவும் முடியாது. அப்படிப்பட்ட கொடிய நோய். இதில் பாதிக்கப்பட்டுவிட்டால் அந்த குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் சக்கர நாற்காலிதான். மருத்துவர்களின் கண்காணிப்பிலேயே இருக்க வேண்டும். இந்த நோய் பாதித்த குழந்தைகளை அன்போடும், கரிசனத்தோடும் கவனிக்க வேண்டும், பாதுகாக்க வேண்டும் என்பதற்காக பல அமைப்புகள் உலகம் முழுவதும் தோன்றி உள்ளன. சென்னையில் ஜீவன் பவுண்டேசன் என்ற அமைப்பு அதனை செய்து வருகிறது. இந்த அமைப்பு இந்த நோய்பற்றிய விழிப்புணர்வுக்காக மாயோ ராலி என்ற பெயரில் சென்னை மெரீனா பீச்சில் ஒரு பேரணியை நடத்தியது. இதில் நடிகர் கார்த்தி கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். நோய் பாதித்த குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருந்தார். குழந்தைகள் கார்த்திக்கிற்கு நன்றி கார்டுகளை வழங்கினார்கள். இதற்கான ஏற்பாடுகளை ஜீவன் பவுண்டேஷன் திட்ட ஒருங்கிணைப்பாளர்ள் வசந்தி பாபு, அஜய் ஆகியோர் செய்திருந்தனர்.