‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
அஜீத்தைப் பொறுத்தவரை படப்பிடிப்பு தளங்களில் தான் ஒரு முன்னணி நடிகர் என்ற கெடுபிடிகள் எதுவும் செய்யாதவர். குறிப்பாக, தன்னையும் மற்ற நடிகர் நடிகைகளைப்போன்று கவனித்தாலே போதும் எனக்கென்று ஸ்பெசலாக எதுவும் தேவையில்லை என்று சொல்லக்கூடியவர். அதோடு, தனக்காக நிறுத்தப்பட்டிருக்கும் கேரவனுக்குள் காஸ்டியூம் சேஞ்ச் பண்ண போறதோடு சரி, மற்ற நேரங்களில் சக நடிகர், நடிகைகளுடன்தான் வெளியில் அமர்ந்து ஜாலியாக பேசிக்கொண்டிருக்கிறார். அவர்கள் நடிப்பதை ஒரு ரசிகர் போல் அமர்ந்து ரசிப்பார்.
ஆனால் இந்த விசயத்தில் இதுவரை விஜய் மாறுபட்டிருந்தார். அதாவது பெரும்பாலும் அவர் வீட்டில் இருந்து ஸ்பாட்டுக்கு வரும்போது அவரது கார் கேரவன் நிற்கும் இடத்திற்கு சென்று அதன் வாசலருகேதான் நிற்கும். அதிலிருந்து இறங்கி, அப்படியே அவர் கேரவனுக்குள் சென்று விடுவார். அதன்பிறகு எப்போது டைரக்டர் அழைக்கிறாரோ அப்போதுதான் மேக்கப் போட்டுக்கொண்டு வெளியில் தலைகாட்டுவார். அதேபோல் கேமரா முன்பு வந்து நடித்து முடித்ததும் அப்படியே கேரவனுக்குள் சென்று விடுவார். இப்படித்தான் புலி படத்திற்கு முன்பு வரை இருந்து வந்தார் விஜய்.
ஆனால் புலி படத்தில் நடித்து வந்தபோது விஜய்யின் நிலையில் நிறைய மாற்றங்கள். அதாவது, கேரவனை விட்டு வெளியே வருபவர், பின்னர் தனக்கான ஷாட் முடிந்த பிறகும் வெளியில் ஸ்ரீதேவி, ஸ்ருதிஹாசன் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் இடத்திலேயே அமர்ந்து அவர்களுடன் பேசி வந்தவர், தம்பிராமைய்யா உள்ளிட்ட காமெடியன்களுடனும் நிறைய நேரம் செலவிட்டிருக்கிறார். அதனால் இந்த படத்தில் அவர்களுக்கிடையிலான காமெடி காட்சிகள் ரொம்ப இயல்பாக வந்திருக்கிறதாம். விஜய் தங்களுடன் நிறைய நேரம் பேசிக்கொண்டிருந்ததை அப்படத்தில் நடித்தவர்கள் பெருமையாக சொல்லிக்கொண்டு வருகிறார்கள்.