அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
இன்று தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா, தான் அறிமுகமான முதல் படத்தின் படப்பிடிப்பில் இருந்து பாதியிலேயே ஓடிப் போக நினைத்தாராம். அனுஷ்கா நாயகியாக அறிமுகமான 'சூப்பர்' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற போது ஒரு காட்சியில் நடிக்க அனுஷ்கா அவ்வளவு ரீ-டேக் வாங்கினாராம். நடனம் ஆட கொஞ்சம் கூட வராதாம். படத்தின் இயக்குனர் பூரி ஜெகன்னாத்தும், நாயகன் நாகார்ஜுனாவும் அதைக் கண்டு கோபப்படாமல் பொறுமையாக இருப்பார்களாம். ஒரு கட்டத்தில் அனுஷ்காவுக்கு கண்களில் கண்ணீரே வந்து விட்டதாம். அதோடு படப்பிடிப்பை விட்டு ஓடிப் போகலாம் என்றும் முடிவு செய்தாராம். ஆனால், நாகார்ஜுனாதான் அனுஷ்காவிற்கு தைரியமூட்டி, ஆதரவாக இருந்து தொடர்ந்து நடிக்கக் காரணமாக இருந்தாராம்.
அனுஷ்காவே அந்த சம்பவத்தைப் பற்றி சமீபத்தில் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார். அன்று மட்டும் சினிமாவே வேண்டாம் என்று அனுஷ்கா ஓடிப் போயிருந்தால் இன்று தமிழ், தெலுங்குத் திரையுலகம் ஒரு அழகான, திறமையான நடிகையை இழந்திருக்கும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ், தெலுங்கில் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் அனுஷ்கா நடித்து அவருடைய திறமையை மேலும் வெளிப்படுத்தி வருகிறார். அனுஷ்கா நடித்துள்ள 'ருத்ரமாதேவி, இஞ்சி இடுப்பழகி' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.