'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மோகன்லால் மலையாள நடிகர்தான் என்றாலும் கிட்டத்தட்ட அவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர் மாதிரிதான். பின்னே தமிழ்நாட்டு மருமகன் இல்லையா..? சென்னையில் பல இடங்களில் அவரது வீடுகள் இருக்கின்றன. அதனால் மோகன்லாலுக்கு சென்னை பாசம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். அது அவ்வப்போது அவரது படங்களிலும் வெளிப்படும். 'உதயநாணுதாரம்' என்கிற படத்தில் கேரளாவில் இருந்து சென்னைக்கு வந்து தங்கி, உதவி இயக்குனராக பணியாற்றி, இங்கேயே படம் இயக்க வாய்ப்பு தேடி அலைவார் மோகன்லால்.
அதேபோல ரஞ்சித் இயக்கத்தில் உருவான 'ராக் அன்ட் ரோல்' படத்தில் இசையமைப்பாளரான நடித்திருக்கும் மோகன்லால் சென்னைனையை சேர்ந்தவராக இருப்பார். தன்னிடம் பாடகி வாய்ப்பு கேட்டு வரும் லட்சுமிராய் மீது காதல் வயப்படும் மோகன்லால், சென்னையில் உள்ள தனது இசைக்குழு மற்றும் ரவுடி நண்பர்களின் உதவியால் காதலில் ஜெயிப்பதாகவும் காட்சிகள் அமைந்திருந்தன.
இப்போது நேற்று வெளியாகியுள்ள 'லோஹம்' படத்தில் கூட கோழிக்கோட்டில் கார் ட்ரைவராக நடித்திருக்கும் மோகன்லால், அந்த ஊர் ட்ராபிக் பற்றி ஆண்ட்ரியாவிடம் பேசும்போது “சென்னை மாதிரி பாலங்கள் இங்க இருக்கணும் மேடம்.. சென்னையை கண்டு நம்ம ஆட்கள் படிக்கணும்” என திரும்ப திரும்ப சென்னையின் பிரமாண்ட பாலங்கள் குறித்து வசனம் பேசுவதான காட்சிகள் சென்னை தியேட்டர்களில் ரசிகர்களின் கைதட்டலை அள்ளுகின்றன.