ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விஜய் சேதுபதி போலீசாக நடிக்க போகிறார் என்று கடந்த பல மாதங்களுக்கு முன்பே செய்தி வெளியிட்டிருந்தோம். அதனை இப்போது அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
பண்ணையாரும் பத்மினியும் படத்தை இயக்கிய எஸ்.யூ.அருண் குமார் அடுத்து இயக்கும் படம் சேதுபதி, இதில் விஜய் சேதுபதி போலீஸ் இன்ஸ்பெக்டராக நடிக்கிறார். பீட்சா படத்துக்கு பிறகு ரம்யா நம்பீசன் விஜய்சேதுபதியுடன் இணைகிறார். இவர்களுடன் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி வில்லனாக நடிக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார், நிவாஸ் இசை அமைக்கிறார். வான்சன் மூவீஸ் சார்பில் ஷான் சுதர்சன் தயாரிக்கிறார்.
"படத்தில் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக விஜய் சேதுபதி நடிக்கிறார். காக்கி சட்டையின் கம்பீரத்தையும, நேர்மையையும் பிரதிபலிக்கும் படம். முன் தயாரிப்பு வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. அடுத்த மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது" மேற்கண்ட தகவல்களை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.