டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தெலுங்குத் திரையுலகில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகைகள்தான் முன்னணியில் இருந்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக சென்னையைச் சேர்ந்த த்ரிஷா சில வருடங்கள் முன்னர் வரை தெலுங்கில் நம்பர் 1 நடிகையாக இருந்தார். அவருக்கு அடுத்து சமந்த கடந்த சில வருடங்களாக நம்பர் 1 நடிகையாக இருக்கிறார். த்ரிஷாவுக்கு திரும்பவும் மார்க்கெட் சூடுபிடித்துள்ளது, தமிழ், தெலுங்கில்சில படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். சமந்தா, தற்போது தமிழில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
அவர்களைத் தொடர்ந்து சென்னைப் பெண்ணான ரெஜினா கஸான்ட்ரா தெலுங்கில் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கின் பிரபல இளம் இயக்குனரான ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் 'சுப்பிரமணியபுரம் ஃபார் சேல்' என்ற படத்தில் ரெஜினா கதாநாயகியாக நடித்து வருகிறார். அவர், ரெஜினா விரைவில் தெலுங்குத் திரையுலகில் நம்பர் 1 இடத்தைப் பிடிப்பார் எனப் பாராட்டியுள்ளார். 'சிவா மனசுலோ ஸ்ருதி' படம் மூலம் தெலுங்கில் அறிமுகமான ரெஜினா கொஞ்சம் கொஞ்சமாக தெலுங்குத் திரையுலகில் முன்னேறி வருகிறார். சமந்தா, தமிழ்ப் படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருவதால், ரெஜினாவின் தெலுங்கு நம்பர் 1 கனவு நிறைவேறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.