தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஓ காதல் கண்மணி படத்தை அடுத்து தனது புதிய படவேலைகளை தொடங்கியிருக்கிறார் மணிரத்னம். இந்த படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கிறார். அவரது முந்தைய படத்தில் நடித்த துல்கர்சல்மானும் இன்னொரு ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்திற்கான கதை விவாதம், லொகேசன் தேர்வினை முடித்து விட்ட மணிரத்னம், இன்னமும் ஹீரோயின் யார் என்பதை உறுதிப்படுத்தவில்லை. அதேசமயம், இது என்ன மாயம் படத்தில் நடித்துவிட்டு தற்போது ரஜினி முருகன் ரிலீஸை எதிர்பார்த்தும், பாம்பு சட்டை உள்பட பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் மலையாள நடிகை கீர்த்தி சுரேஷ் உள்பட சில வளர்ந்து வரும் நடிகைகளை அழைத்து ஆடிசன் நடத்தி விட்டார். அதில் கீர்த்தி தனது கதைக்கு மேட்சாகியிருப்பதாக சொன்ன மணிரத்னம், அப்புறம் சொல்லி அனுப்புறேன் என்று அனுப்பி வைத்து விட்டாராம்.
ஆனால், அது நடந்து 2 மாதங்களுக்கு மேலாகி விட்டதாம். அன்றிலிருந்து மணிரத்னம் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வரும் என்று வழிமேல் விழி வைத்து காத்துக்கொண்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். ஆனால் இன்னமும் ஒரு அழைப்பும் வந்தபாடில்லையாம். ஆனால் இதுபற்றி மணிரத்னத்தின் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கீர்த்தி சுரேஷ் கேட்டால், பல நடிகைகளை ஆடிசன் செய்ததில் உங்கள் பெயர்தான் முதலாம் இடத்தில் உள்ளது. அதனால், நீங்கள் செலக்சன் ஆவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்களாம். இருப்பினும், வரம் கொடுக்க வேண்டிய சாமி இன்னும் வாய்திறக்கவில்லையே. அதனால் மணிரத்னம் அழைப்பாரா? மாட்டாரா? என்று பதட்டத்தில் உள்ளார் கீர்த்தி சுரேஷ்.