ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இந்தியத் திரையுலகில் 'பாகுபலி' படத்தின் வசூல் ஹிந்தித் திரையுலகினரையும் வியக்க வைக்கும் அளவிற்கு சென்று கொண்டிருக்கிறது. 600 கோடி ரூபாய் வசூலை நெருங்கிக் கொண்டிருக்கும் 'பாகுபலி' படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் ஆரம்பமாக உள்ளது.
இதனிடையே, 'பாகுபலி' படத்தில் நடிப்பதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக வேறு எந்தப் படத்திலும் நடிக்க சம்மதிக்காத பிரபாஸ், இதுவரை எந்தத் தெலுங்கு நடிகரும் வாங்காத ஒரு சம்பளத்தை 'பாகுபலி' படத்திற்காக வாங்கியிருக்கிறார் என்ற தகவல் டோலிவுட்டில் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தின் தயாரிப்புச் செலவுடன் ஒப்பிடும் போது 'பாகுபலி' படம் சுமார் நான்கு மடங்கிற்கு மேல் வசூல் செய்து கொடுத்துள்ளது.
படத்திற்காக தன்னுடைய அனைத்து உழைப்பையும் கொட்டிய பிரபாஸின் உழைப்பைப் பார்த்து தயாரிப்பாளர்கள் அவருக்கு மிகப் பெரிய சம்பளம் ஒன்றைக் கொடுத்துள்ளார்களாம். அந்த சம்பளம் என்பது படத்தின் லாபத்தில் கிடைத்துள்ள குறிப்பிட்ட சதவீதம் என்கிறார்கள். முதல் பாகத்தில் கிடைத்த அந்த லாபத்தின் பங்குத் தொகைதான் பிரபாஸின் சம்பளம் என்கிறார்கள். அது மட்டுமல்ல 'பாகுபலி 2'ம் பாகத்திற்கான பங்குத் தொகையையும் பிரபாஸுக்கு உயர்த்தித் தர தயாரிப்பாளர்கள் முடிவெடுத்துள்ளார்களாம். கூட்டிக் கழித்துப் பார்த்த பல தெலுங்கு ஹீரோக்கள் மயக்கம் போடாத குறையாக நெருங்கிய வட்டாரங்களிடம் புலம்பி வருகிறார்களாம்.