துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
இந்த தலைப்பை பார்த்தவுடன், நயன்தாராவின் ரசிகர்கள் உற்சாகம் ஆவார்களா....இல்லை உதாசீனப்படுத்துவார்களா...என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால், இந்த செய்தி, நயன்தாராவை பற்றியது தான்.
சூர்யா நடிப்பிலான மாசு படத்திற்கு பிறகு, நயன்தாரா நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் படம் மாயா. சூப்பர் நேச்சுரல் ஹாரர் த்ரில்லராக, மாயா படம் உருவாகி உள்ளது.
மாயா என்ற பெண் கேரக்டரை மட்டும் மையப்படுத்தி அல்லாமல், அமானுஷ்ய விஷயங்கள் பலவற்றை உள்ளடக்கி, சிறிய பட்ஜெட்டில் இப்படத்தை தயாரிக்க பட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டது. இந்தபடத்தில், நயன்தாரா நடித்தால், சிறப்பாக இருக்கும் என்றெண்ணிய பட தயாரிப்பு நிறுவனம், நயன்தாராவை அணுகி படத்தின் கதையை கூறியது.
கதையை கேட்ட நயன்தாரா, தனது முடிவை சொல்ல, 2 நாட்கள் காலஅவகாசம் கேட்டிருந்தார். 2 நாட்களுக்கு பிறகு, படத்தில் நடிக்க தனக்கு சம்மதம் என்று நயன்தாரா தெரிவி்த்திருந்தார்.
மதுரையை சேர்ந்த புதுமுக இயக்குநர் அஸ்வின் சரவணனின் இயக்கத்தில், இந்த மாயா படம் உருவாகி உள்ளது. பல குறும்படங்களை இயக்கியுள்ள அஸ்வின் சரவணன், அதற்காக, பல விருதுகளை வென்றுள்ளார். குறும்படங்களின் வெற்றியை தொடர்ந்து, மாயா படத்தின் மூலம், கோலிவுட்டில் இயக்குநராக உருவெடுத்துள்ளார்.
ஹாரர் த்ரில்லர் படம் என்றாலே, பேயை மட்டும் மையப்படுத்தி இருக்கும். ஆனால், மாயா படம், சூப்பர் நேச்சுரல் ஹாரர் த்ரில்லர் படம் என்பதால், பேயை மட்டும் மையப்படுத்தாமல், அமானுஷ்ய விஷயங்களால், படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து கேரக்டர்களிடையேயும் பயம் மற்றும் பதட்டத்தையும் ஏற்படுத்தும் வகையில் படம் உருவாகியுள்ளது.
ஈரம், யாவரும் நலம் உள்ளிட்ட படங்களின் சாயலில் உருவாகியுள்ள மாயா படத்தில், ஆரி, ரோபோ சங்கர், மைம் கோபி, ரேஷ்மி மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மாயா படத்தி்ல், நயன்தாரா, 1 வயது குழந்தையின் அம்மா ஆக நடித்துள்ளார். முன்னதாக, இந்த கேரக்டரில் நடிக்க நயன்தாரா சம்மதிப்பாரா என்று அஸ்வின் சரவணன் தயக்கத்துடன் தான் நயன்தாராவை அணுகியிருந்தாராம். ஆனால், இந்த கேரக்டரில் நடிக்க நயன்தாரா மறுப்பு எதுவும் கூறாமல், எவ்வித தலையீடும் இல்லாமல், உடனடியாக நடிக்க சம்மதித்ததோடு இல்லாமல், அபரிமிதமான நடிப்பையும் நயன் வெளிப்படுத்தியுள்ளார். கதையின் முக்கியத்துவம் கருதி, இந்த கேரக்டரில் நடிக்க நயன்தாரா சம்மதம் தெரிவித்ததாக படக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழ் மட்டுமல்லாது தென்னந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக உள்ள நயன்தாரா, இந்த படத்தில் அம்மா கேரக்டரில் நடித்துள்ளதன் மூலம், மிகப்பெரிய ரிஸ்க் எடுத்துள்ளார். தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் நினைத்ததற்கு ஏற்ப, இந்த கேரக்டரில் நடித்து, அந்த கேரக்டருக்கு மேலும் அழகு சேர்த்துள்ளார் நயன்தாரா......
நயன்தாரா நடிப்பில் மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தை , தேனாண்வடாள் பிலிம்ஸ் நிறுவனம் விரைவில் வெளியிடுகிறது.