ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் பாக்யராஜ் மகன் சாந்தனுக்கும் - நிகழ்ச்சி தொகுப்பாளர் கீர்த்திக்கும் இடையே, திருமணம் இனிதே நடந்து முடிந்துள்ளது. தமிழ்த்திரையுலகில் திரைக்கதை மன்னன் என்று பெயரெடுத்துள்ள கே.பாக்யராஜ், நடிகர் மற்றும் இயக்குநர் ஆகவும் வெற்றிக்கொடி நாட்டியவர். பாக்யராஜ் - பூர்ணிமா தம்பதிக்கு, சாந்தனு என்ற மகனும், சரண்யா என்ற மகளும் உள்ளனர். சாந்தனு, நிகழ்ச்சி தொகுப்பாளர் கீர்த்தியை காதலித்து வந்தார். இருவீட்டாரின் சம்மதத்துடன், சென்னையில் உள்ள இஸ்கான் கோவிலில் அவர்களது திருமணம் நடைபெற்றது.
தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன், இயக்குநர் மணிரத்னம், ஹரி, பார்த்திபன், பாண்டியராஜன், நடிகர்கள் விஜய், கார்த்தி உள்ளிட்டோர் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
நடிகர் விஜய், சாந்தனுவிடம் தாலியை எடுத்துக்கொடுக்க, சாந்தனு, அதை, கீர்த்தியின் கழுத்தில் கட்டினார்.
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தி.மு.க.முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, ஐ.ஜே.கே. கட்சி தலைவர் பச்சமுத்து உள்ளிட்டோர் திருணமத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.