'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ஒரு படத்திற்கு, 11 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார். அடுத்த மாதம் வெளியாக உள்ள, கட்டி பட்டி படத்திற்காக, படத் தயாரிப்பாளர்களிடம் இருந்து, இவ்வளவு அதிக தொகையை இவர் பெற்றுள்ளார். இந்த தொகை தான், பாலிவுட்டில், நடிகை ஒருவருக்கு கிடைத்த அதிக தொகையாக இருக்கும் என, கூறப்படுகிறது.
இமாச்சல பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்டவர் நடிகை கங்கனா ரனாவத், 28. கடந்த 2006ல், கேங்ஸ்டர் என்ற படத்தில் நடித்ததன் மூலம், பாலிவுட்டில் கால் பதித்த இவர், இரண்டு முறை தேசிய விருதுகளை பெற்றுள்ளார். தனு வெட்ஸ் மனு மற்றும் கிரிஷ் - 3 போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பெரும் புகழ் பெற்ற கங்கனாவின் சம்பளமும், கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
இப்போது அவர் நடித்து வரும், இயக்குனர் நிகில் அத்வானியின், கட்டி பட்டி படத்திற்காக, 11 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார். இது தான், பாலிவுட்டில், ஒரு படத்திற்காக நடிகை ஒருவர் பெறும் அதிகபட்ச சம்பளத் தொகை.
இதுகுறித்து நடிகை கங்கனாவிடம் கேட்டபோது, ஆம், இந்த படத்திற்கு நான், 11 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளேன். படத்தில் என் உழைப்புக்கு இது சரியான தொகை தான்; இந்த படத்தில் ஓராண்டாக நடித்து வருகிறேன். இது ஒன்றும் அதிகமான சம்பளமில்லை. எனினும், பாலிவுட்டில் அதிக சம்பளம் பெற்ற நடிகை எனும் போது மகிழ்ச்சியாக உள்ளது, என்றார்.
இவரின், கட்டி பட்டி படம், அடுத்த மாதம், 18ல் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் நாயகனாக, இம்ரான் கான் நடித்துள்ளார். அவர் இவ்வளவு அதிக தொகையை சம்பளமாக பெறவில்லை.