ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
விஜய்சேதுபதிக்கு நேரமே சரியில்லை போலிருக்கிறது. அட்வான்ஸை வாங்கிவிட்டு குறிப்பிட்ட தேதியில் கால்ஷீட் தரவில்லை என்று சில தயாரிப்பாளர்கள் அவர் மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்திருந்தனர். தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடிகர் சங்க நிர்வாகிகள் இந்தப் பிரச்சனையில் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தினர்.
விஜய்சேதுபதி மீது கொடுக்கப்பட்ட புகார்களில் ஒன்று... ஸ்டுடியோ 9 சுரேஷ் கொடுத்த புகார். சில வருடங்களுக்கு முன் ஸ்டுடியோ 9 நிறுவனத்தின் தயாரிப்பில் வசந்தகுமாரன் என்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட விஜய்சேதுபதி ஒரு கோடி ரூபாய் அட்வான்ஸ் வாங்கினாராம். வருடங்கள் பல கடந்தும் வசந்தகுமாரன் படத்தில் நடிக்க விஜய்சேதுபதி கால்ஷீட் தரவில்லை. கால்ஷீட் கேட்டுபோனபோதெல்லாம் அடுத்தப் படம் உங்களுக்குத்தான் என்று சொல்லிச் சொல்லி ஏறக்குறைய 4 வருடங்களைக் கடத்திவிட்டார். ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த சுரேஷ், விஜய்சேதுபதிக்கு எதிராக பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை சுமத்தி பிரச்சனைகள் செய்தார்.
பின்னர் இந்த விவகாரம் தயாரிப்பாளர் சங்கத்துக்குப் போனது. அண்மையில் நடைபெற்ற பஞ்சாயத்தின்போது, ஸ்டுடியோ 9 நிறுவனத்தின் படத்தில் நடிக்க மாட்டேன். வாங்கிய அட்வான்ஸை திருப்பிக் கொடுத்துவிடுகிறேன் என்று சொல்லி இருக்கிறார் விஜய்சேதுபதி. அதை ஸ்டுடியோ 9 சுரேஷ் மட்டுமின்றி, பஞ்சாயத்து பேசியவர்களும் ஏற்கவில்லை.