பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
பாலா இயக்கிய பரதேசி, வசந்தபாலன் இயக்கிய காவியத்தலைவன் என வேதிகாவுக்கு சிறந்த படங்கள் அமைந்தன. துரதிஷ்டவசமாக அப்படங்கள் ஓடாமல்போனதால் வேதிகாவுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தமிழில் ராசியில்லாத முத்திரை குத்தப்பட்டதால் வேதிகாவுக்கு தமிழில் படங்கள் இல்லாமல் போனது.
இந்நிலையில், காவியத்தலைவன் படத்தில் வேதிகா உடன் இணைந்து நடித்த பிருத்விராஜ், வேதிகாவுக்கு ஒரு பட வாய்ப்பை தேடிக் கொடுத்திருக்கிறார்.
இந்த ஜோடி மீண்டும் இணைந்து நடிப்பது தமிழ்ப்படத்தில் இல்லை. மலையாளப் படத்தில்!
பிரபல ஒளிப்பதிவாளரான சுஜித் வாசுதேவ் இயக்குநராக அறிமுகமாகி இயக்கும் ஜேம்ஸ் அன்ட் ஆலிஸ் என்ற படத்தில்தான் வேதிகா - பிருதிவிராஜ் நடிக்கின்றனர்.
பிருத்விராஜ் கதாநாயகனாக நடித்த சிட்டி ஆஃப் காட், மெமரீஸ் செவன்த் டே ஆகிய மலையாளப் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர்தான் சுஜித் வாசுதேவ்.
ரொமான்டிக் காதல், காமெடி படமாக உருவாகும் இப்படம் வெற்றியடைந்தால், வேதிகா மலையாளத்தில் கவனம் செலுத்த வாய்ப்பிருக்கிறது.