டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
டோலிவுட்டின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் 60வது பிறந்தநாள் விழாவை நாளை மறுதினம் அதாவது ஆகஸ்ட் 22 ஆம் தேதி வெகுவிமர்சையாக கொண்டாட ஏற்பாடுகள் உற்சாகமாக நடைபெற்று வருகின்றது. சிரஞ்சீவியின் மகனும் தெலுங்கு திரைஉலகில் பிரபல நடிகருமான ராம் சரண் இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை அருகிலிருந்து கவனித்து வருகின்றாராம்.
பிறந்தநாள் அழைப்பிதழை ராம் சரணே பிரபலங்களைச் சந்தித்து கொடுத்துள்ளார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் அமீர்கான் ஆகியோர் சிரஞ்சீவியின் பிறந்த நாள் விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். டோலிவுடிலிருந்தும் நடிகர்கள் நாகார்ஜுனா,வெங்கடேஷ், ராஜேந்திர பிரசாத்,ரவி தேஜா,நிதின்,அல்லு அர்ஜுன்,அல்லு அரவிந்த்,ஜெகபதி பாபு உள்ளிடோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
மேலும் நடிகைகள் காஜல் அகர்வால்,சமந்தா,ராகுல் ப்ரீத்தி சிங் மற்றும் டோலிவுட்டில் முன்னணி நடிகையாக விளங்கிய ஜெனிலியா ஆகியோருக்கும் பிறந்தநாள் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. சிரஞ்சீவியின் சகோதரரரும் நடிகருமான பவன் கல்யாண் தனக்கு கொடுத்த அழைப்பிதழை ஏற்று விழாவிற்கு வருவதாகக் கூறியுள்ளார். அரசியல் வேறுபாட்டால் பிரிந்திருந்த சிரஞ்சீவியையும் பவன் கல்யாணையும் இரண்டு வருடங்களுக்கு பின்னர் ஒரே மேடையில் காண ரசிகர்கள் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர்.
சிரஞ்சீவியின் பிறந்தநாள் விழா ஹைதராபாத்தில் உள்ள சில்பகல வேதிகா கலையரங்கில் நாளை (ஆகஸ்ட் 21) மாலை 3 மணிக்கு துவங்கவுள்ளது.பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு சிரஞ்சீவி கேக் வேட்டி பிறந்தநாளைக் கொண்டாடவுள்ளார். டோலிவுட் மற்றும் பாலிவுட்டிலிருந்து பல பிரபலங்கள் விழாவிற்கு வருவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.