ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ரஜினிகாந்தை இயக்க வேண்டும் என இன்றைய தலைமுறை இயக்குனர்களும், ரஜினிகாந்தடன் ஒரு படத்திலாவது இணைந்து நடித்துவிட வேண்டும் என்று சில நட்சத்திரங்களும் ஒரு லட்சியமாகவே வைத்திருக்கிறார்கள். ஆனால், யாருக்கும் அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு எளிதில் கிடைத்துவிடுவதில்லை. 'கபாலி' படத்தை இயக்கும் வாய்ப்பும் ரஞ்சித்துக்கும் அவ்வளவு எளிதில் கிடைத்துவிடவில்லை. அவருடைய திறமையால் மட்டுமே அந்த ஒரு வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது, அதுவும் சுலபத்தில் கிடைத்துவிடவில்லை.
'அட்டகத்தி' படத்தையே ரஞ்சித், ரஜினிகாந்தின் மகளான செளந்தர்யாவின் தயாரிப்பில்தான் இயக்குவதாக இருந்ததாம். அடுத்து 'மெட்ராஸ்' படத்தை ரஞ்சித் இயக்கி முடித்தார். அந்தப் படத்தை மட்டும் ரஜினிகாந்த் இரண்டு முறை பார்த்து ரசித்திருக்கிறார். அதன் பின் ரஜினிகாந்தின் புதிய பட வேலைகள் ஆரம்பித்த பின், சௌந்தர்யா, ரஞ்சித்திடம் ஏதாவது கதை இருக்கிறதா என்று கேட்டிருக்கிறார். அவரும் இரண்டு ஒரு வரிக் கதைகளை சௌந்தர்யாவிடம் சொல்லியிருக்கிறார். அந்தக் கதைகளைக் கேட்ட ரஜினிகாந்த் இரண்டாவது கதையை முழுவதுமாக எழுதச் சொல்லியிருக்கிறார். அதன் பின்னும் அவருக்கு ரஜினியைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்கடுத்து சில பல நாட்கள் கழித்தே ரஜினிகாந்த், ரஞ்சித்தைக் கதை சொல்ல அழைத்திருக்கிறார்.
எப்போதும் கதையை முழு புத்தகமாகவே தயார் செய்து கொடுக்கும் பழக்கம் கொண்ட ரஞ்சித், ரஜினிகாந்திடம் எப்படி கதை சொல்வது என்று தவித்திருக்கிறார். ஆனால், ரஜினியைச் சந்தித்த அந்த நிமிடம் அவர் 'மெட்ராஸ்' படத்தைப் பற்றியும், அதில் வரும் கதாபாத்திரங்களைப் பற்றியும் பாராட்டித் தள்ளிய பின், தைரியத்தை வரவழைத்து முதன் முறையாக முழுக் கதையையும் நடித்துக் காட்டி சொல்லியிருக்கிறார். ரஞ்சித்தின் அந்த ஈடுபாட்டைக் கண்ட ரஜினிகாந்த் அப்போதே சம்மதம் சொல்லவில்லையாம். மீண்டும் ஒரு இடைவெளி விட்டுத்தான் அழைத்து அந்தக் கதையைப் பண்ணுவோம், தாணுதான் தயாரிப்பாளர் என்று சொல்லியிருக்கிறார்.