இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
முண்டாசுப்பட்டியில் கிராமத்து மீசைக்கார தாத்தாவாக நடித்தவர் மதுரை மோகன். சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் அவரை இந்த படம்தான் வெளிச்சம் போட்டு காட்டியது. அதிலிருந்து தாத்தா வேடம் என்றாலே கூப்பிடு மதுரை மோகனை என்றாகிவிட்டது. அந்த அளவுக்கு கோடம்பாக்கத்தில் முக்கியமான தாத்தா நடிகராகியிருக்கிறார் மதுரை மோகன். இந்நிலையில், தற்போது அச்சம் என்பது மடமையடா, அண்டாவக்காணோம், ரஜினிமுருகன், கட்டம் போட்ட சட்டை என பல படங்களில் காமெடி, குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார் அவர். இதில் அண்டாவக்காணோம் படத்தில் தனக்கு மிகப்பெரிய ரோல் தரப்பட்டிருப்பதாக சொல்கிறார் மதுரை மோகன்.
அது எந்தமாதிரியான வேடம் என்று அவர் கூறும்போது, ஒரு கிராமத்தில் ஒன்றாகவே படித்து வளர்ந்த இரண்டு நபர்கள் ஜாதிப்பிரச்சினையினால் பகைவர்களாகிறார்கள். அவர்களால் ஊரும் ரெண்டுபடுகிறது. இறுதியில் அவர்கள் ஒன்றுசேரும்போது ஊரும் இணைந்து விடும். இந்த கதையில் நானும், உசிலம்பட்டியைச்சேர்ந்த ஒருவரும் எதிரும் புதிருமான வேடத்தில் நடித்திருக்கிறோம். இப்படத்தில் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரைக்கும் நக்கல், நய்யாண்டி என்று நடித்திருக்கிறேன். காமெடி, நட்பு, வில்லத்தனம், லொள்ளு, ஜொள்ளு என்று எல்லாவிதமான அம்சங்களையும் இந்த படத்தில் நான் வெளிப்படுத்தி நடித்திருக்கிறேன். அந்த அளவுக்கு எனக்கு மிகப்பெரிய கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார் டைரக்டர். அதனால் இந்த அண்டாவக்காணோம் படம் எனது கேரியரில் முக்கியமான படமாக இருக்கும்.