தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே ஆகியோர் நடிக்க உள்ள புதிய படத்திற்கு 'கபாலி' என்ற தலைப்பை அறிவித்தனர். ஆனால், அதே பெயரில் ஒரு படம் தயாராகி இசை வெளியீடு வரை நடந்து முடிந்தது அதன் பின்னரே தெரிய வந்தது. இன்னும் 'கபாலி' படத்தின் டைட்டில் பிரச்சனை எப்படி போகப் போகிறது என்பதே தெரியவில்லை. அதற்குள் முன்னணி இயக்குனரான பிரியதர்ஷன் இயக்க உள்ள படத்தின் தலைப்பு ஒன்றும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
இயக்குனர் விஜய்யின் சொந்தப் படத் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் 'கஞ்சீவரம்' படத்திற்குப் பிறகு பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா ரெட்டி இணைய உள்ள படத்திற்கு 'சில நேரங்களில்' என தலைப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. படத்தின் பெயர் பற்றி பிரகாஷ்ராஜ் அவருடைய டிவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “அர்த்தமுள்ள நாள், பிரியதர்ஷனின் இயக்கத்தில் 'சில நேரங்களில்' படப்பிடிப்பில்...அவருடைய ஆழத்தைப் பார்த்து பிரமித்துப் போயிருக்கிறேன். ஸ்ரேயா ரெட்டியின் நடிப்புப் பசி அதிகரிப்பதற்கு சாட்சியாக இருக்கிறேன்,” என நேற்று பதிவிட்டுள்ளார்.
'சில நேரங்களில்' என்ற பெயரில் மலையாள இயக்குனரான ஜெயராஜ் இயக்கத்தில் வின்சென்ட் அசோகன், நவ்யா நாயர், வினீத், ரகுவரன் மற்றும் பலர் நடித்துள்ள படம் 2008ம் ஆண்டில் வெளிவந்துள்ளது. பிரியதர்ஷனுக்கு தமிழ்ப் படங்களைப் பற்றித் தெரியாமல் இருக்கலாம். ஆனால், படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் விஜய்க்குக் கூடவா தெரியாமல் இருக்கும். இந்தப் படத்தில் தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான பிரபுதேவா ஸ்டுடியோஸ் மூலம் இயக்குனரும், நடிகருமான பிரபுதேவா வெளியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.