புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
சிம்பு, ஹன்சிகா நடித்த வாலு திரைப்படம் கடந்த 14ந் தேதி வெளிவந்தது. நேற்று படத்தின் வெற்றி விழாவை டி.ராஜேந்தர் கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிம்பு நிருபர்களிடம் கூறியதாவது:
வாலு படத்துக்கு பல இடையூறுகள் பல வழிகளில் இருந்து வந்தது. இளைய தளபதி விஜய் அண்ணன், எனது அப்பா, அப்பா ஆகியோரின் உதவியாலும் ரஜினி சார், அஜித் சார் ஆசீர்வாதத்துடனும் படம் வெளிவந்து நல்லபடியாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்துக்கு வந்த பிரச்சினைகளுக்கான காரணத்தை நானே ஏற்றுக் கொள்கிறேன். ஆண்டவன் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வான். எதையும் தாங்கும் சக்தியை எனக்கு கொடுத்திருக்கிறான். இனிமேல் வருடத்துக்கு இரண்டு அல்லது 3 படங்களில் நடிப்பது என்று முடிவு செய்திருக்கிறேன். தற்போது இது நம்ம ஆளு, கவுதம்மேனன் சார் படம், செல்வராகவன் சார் படத்தில் நடித்து வருகிறேன்.