ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள திரையுலகில், 250 படங்களுக்கு மேல் நடித்த நடிகர் பரவூர் பரதன் (வயது 86), உடல்நலக்குறைவு காரணமாக, காலமானார்.
1940ம் ஆண்டின் இறுதியில் நாடகத்துறையின் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையை துவக்கியவர் பரவூர் பரதன். பின் 1951ம் ஆண்டில், இவரது நடிப்பிலான முதல் திரைப்படம் வெளியானது. 1951 முதல் 2009ம் ஆண்டுவரை, மலையாள திரையுலகின் இன்றியமையாத நடிகராக விளங்கி வந்தார். வில்லனாக தனது நடிப்பு வாழ்க்கையை துவக்கிய பரதன், பின் கேரக்டர் ரோல்களிலும் நடித்தார்.
இன் ஹரிஹர நகர், அனியன் பவா சேத்தன் பவா, அனாதிபிரவு, மேலேபரம்பில் ஆண்வீடு உள்ளிட்ட படங்கள், இவரது நடிப்பில் பிரபலமான படங்கள் ஆகும்.
வயது மூப்பின் காரணமாக, 2009ம் ஆண்டிலிருந்து நடிப்பதை விட்டுவிட்டார். பின் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இந்நிலையில், அவர் இன்று (ஆகஸ்ட் 19ம் தேதி), கொச்சியில் உள்ள தனது வீட்டில் காலமானார்.