மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ஏவிஎம், சூப்பர்குட் மாதிரியான பெரிய நிறுவனங்களே படம் தயாரிக்க தயங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் "குறைந்த பட்ஜெட், நிறைய உழைப்பு, நிறைய லாபம்" என்கிற குறிக்கோளோடு தயாரிப்பாளராக அறிமுகமானவர் சி.வி.குமார். தனது திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் 5 ஆண்டுளில் 13 படங்களை தயாரித்து சாதனை படைத்துள்ளார்.
2012ம் ஆண்டு அட்டகத்தி படத்துடன் இவரது தயாரிப்பு பயணம் தொடங்கியது. அதே ஆண்டு பீட்சாவும் வெளிவந்தது. இரண்டுமே ஹிட்டானதும் இண்டஸ்ட்ரி திருக்குமரன் நிறுவனத்தை திரும்பி பார்த்தது. அதன் பிறகு 2013ல் தயாரித்த சூதுகவ்வும் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைத்தது. அடுத்து வெளிவந்த வில்லா தோல்வி அடைந்தது. அதைத் தொடர்ந்து 2014ல் வெளிவந்த முண்டாசுபட்டி ஹிட்டானது தெகிடி, சரபம் படங்கள் சுமாராக ஓடியது. இந்த ஆண்டு எனக்குள் ஒருவன், இன்று நேற்று நாளை படங்களை வெளியிட்டது, இன்று நேற்று நாளை வெற்றி பெற்றது.