Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

இத்தனை ஆண்டு இடைவெளி ஏன்...? அசின் பேட்டி!

19 ஆக, 2015 - 11:30 IST
எழுத்தின் அளவு:
Asin-reply-why-break-in-film

தென்னிந்திய சினிமாவை கலக்கிய நடிகை அசின், பாலிவுட்டிலும் ஒரு ரவுண்ட் வந்தார். கடைசியாக மூன்றாண்டுகளுக்கு முன்னர் கில்லாடி 786 படத்தில் நடித்தவர், அதன்பின்னர் எந்தவொரு படத்திலும் நடிக்கவில்லை, தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ''ஆல் இஸ் வெல்'' என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரியாகியிருக்கிறார். இப்படம் இந்தவாரம் ரிலீஸாக இருக்கிறது. ''ஆல் இஸ் வெல்'' பற்றி அசின் பகிர்ந்து கொண்டுள்ளதாவது...


ஆல் இஸ் வெல் எந்த மாதிரியான படம்.?


உறவு சம்பந்தப்பட்ட கதை தான் 'ஆல் இஸ் வெல்'. தாய்-மகன் பற்றிய உறவு, கணவன் - மனைவி பற்றிய உறவு, ஒரு பெண் - ஆண் சம்பந்தப்பட்ட உறவு இப்படி சொல்லி கொண்டே போகலாம். ஆனால் இது யாரையும் உயர்த்தி பேசும் படம் அல்ல, ஒரு பெண்ணுக்கும், ஆணுக்கும் இடையேயான உறவு. உறவு தான் 'ஆல் இஸ் வெல்'.


படத்தில் உங்கள் கேரக்டர் பற்றி சொல்லுங்க.?


ஆல் இஸ் வெல்-ல் நிம்மி எனும் கேரக்டரில் ரொம்ப எளிமையான, அதேசமயம் குறும்புத்தனமான, தைரியமான, எப்பவும் பாசிட்டிவ்வான எண்ணம் கொண்ட பெண்ணாக நடிக்கிறேன். நிம்மிக்கு புத்தகம் படிப்பது ரொம்ப பிடிக்கும், புத்தகத்தில் இருப்பவைகளை தன் வாழ்விலும் நடக்கும் என்பதை உண்மை என்று நம்புவள். நான் இண்டர் பாலா எனும் அபிஷேக் பச்சனை சந்திக்கிறேன். அபிஷேக்கின் நெகட்டீவான எண்ணங்களை பாசிட்டிவ்வாக மாற்றுவது போன்று என் கேரக்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.


டிரைலரிலேயே உங்களது கேரக்டர் ரொம்ப வலுவாக இருப்பது போன்று தெரிகிறதே.?


நன்றி! டிரைலரில் எனது கேரக்டரை காட்டிலும் அபிஷேக்கின் கேரக்டர் தான் இன்னும் வலுவாக உள்ளது. அபிஷேக்கின் கேரக்டர் மிகவும் சுயநலம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. தனது பெற்றோருக்கு இடையேயான மனகசப்பு உள்ளிட்ட பல பிரச்னைகளால் தவிக்கிறார் அவர். இதனாலேயே அவர் திருமண மற்றும் உறவுகள் என்றாலே வெறுக்கிறார், அப்படி ஒரு கேரக்டர் அபிஷேக் பச்சன் உடையது.


மூன்று ஆண்டுகள் சினிமாவில் நடிக்கவில்லை... ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி.?


உண்மைதான். கில்லாடி 786 படத்திற்கு பிறகு நான் ஓய்வு எடுத்து கொண்டேன். 2012-ல் மட்டும் நான் நடித்த போல்பச்சன், ஹவுஸ்புல், கில்லாடி 786 என அடுத்தடுத்து மூன்று படங்கள் வெளியாகி ஹிட்டாகின. இந்தபடங்களுக்கு பிறகு நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் நான் நடிக்கவில்லை. நான் நடிக்கும் படங்களில் எனது கேரக்டர் சுவாரஸ்யமாகவும், சிறப்பு வாய்ந்ததாகவும், புதிதாகவும் இருக்க வேண்டும். அப்படி அமையும் பட்சத்தில் தான் படங்களை நான் தேர்வு செய்து நடிக்கிறேன். இந்த மூன்று ஆண்டுகளில் என்னை கவரும்படி எந்த கேரக்டரும் அமையவில்லை, அதனால் தான் எந்தபடத்திலும் நான் நடிக்கவில்லை.


சினிமாவுக்கு வந்து 14 ஆண்டுகளில் வெறும் 25 படங்களில் தான் நடித்துள்ளீர்கள். ஏன்.?


ஆல் இஸ் வெல் எனது 25வது படம். நான் சினிமாவுக்கு வந்து 14 ஆண்டுகளாகிவிட்டது. இத்தனை ஆண்டுகளில் 25 படங்கள் தான் நடித்துள்ளேன். இந்த படங்கள் மிகவும் குறைவு தான். நான் படங்களில் நடிக்க தான் விரும்புகிறேன், அது எத்தனை கேரக்டர் என்பது முக்கியமல்ல. பண ரீதியான பிரச்னைகள் எதுவும் எனக்கு இல்லை. 17 வயதில் சினிமாவில் நடிக்க வந்தேன், நடித்த கேரக்டரையே திரும்ப திரும்ப நடிக்க எனக்கு விருப்பவில்லை.


இந்தப்படத்தில் நடிக்க முக்கியமான காரணம் எதுவும் உண்டா.?


ஒரே ஒரு காரணம் மட்டும் தான், அது இயக்குநர் உமேஷ் சுக்லா தான். மிகவும் திறமையான இயக்குநர் அவர். அவர் இயக்கிய ஓ மை காட், எனக்கு பிடித்தமான படம். அவர் என்னை சந்திக்க விரும்பியபோது, அவரது இயக்குநரை திறனை பார்த்து நானும் சரி என்று சொன்னேன். என் வீட்டிற்கு உமேஷ் வந்தார், சுமார் 1 நேரம் ஓ மை காட் படத்தை பற்றித்தான் பேசினோம். பின்னர் ஆல் இஸ் வெல் கதையை சொன்னார், பிடித்திருந்தது, இது தான் எனது 25வது படமாக இருக்க வேண்டும் என்று நினைத்து ஓகே., சொன்னேன்.


தென்னிந்திய மற்றும் பாலிவுட் படங்களுக்கு இடையேயான வித்தியாசம் என்ன.?


நான் தென்னிந்திய படங்களிலும் நடித்திருக்கிறேன், பாலிவுட் படங்களிலும் நடித்திருக்கிறேன். என்னை பொறுத்தவரை இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. படம் எடுக்கும் விதம் எல்லாமே ஒன்று தான். ஆனால் கலாச்சாரம் உள்ளிட்ட மற்ற விஷயங்கள் தான் வேறுபடுகின்றன. மேலும் தென்னிந்திய படங்களை பொறுத்தமட்டில் பெரும்பாலும் படங்களின் ஷூட்டிங் காலை முதல் மாலை வரை மட்டுமே இருக்கும். ஆனால் பாலிவுட்டில் அந்த மாதிரி நேரம் எதுவும் கிடையாது. எனக்கு இரண்டு மொழிகளிலும் நடிக்கவே ஆசை.


உங்களது படங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த கேரக்டர் என்ன.?


பாலிவுட் படங்களை பொறுத்தமட்டிலும் கஜினியில் வந்த கல்பனாவும், தென்னிந்திய படங்களில், தெலுங்கில் நான் இரண்டாவதாக நடித்த சிவமணி படத்தில் இடம்பெற்ற வசந்தா கேரக்டரும் என்னை மிகவும் கவர்ந்தவை. அப்போது தான் சினிமாவுக்கு நான் வந்த நேரம். அப்போது நான் நடித்த ஒவ்வொரு படங்களிலும் எனது கேரக்டர் சிறப்பாக வந்தது. அதற்கு முழுக்க முழுக்க தென்னிந்திய படங்கள் தான் காரணம்.


இவ்வாறு அசின் கூறியுள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in