பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தென்னிந்தியத் திரையுலகின் மையப் புள்ளியாக சென்னை ஒரு காலத்தில் இருந்தது. இங்குதான் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிப் படங்கள் உருவாகின. அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக அந்தந்த மாநிலங்களில் அந்தந்த மொழிப் பேசும் படங்களின் மையம் இடம் மாறியது. தெலுங்குத் திரையுலகின் இன்றைய தலைமுறையினரிலும் பெரும்பாலானோர் சென்னையில்தான் பிறந்தனர். அவர்களில் பலரும் சென்னையில்தான் படித்து வளர்ந்தனர்.
தமிழ்த் திரையுலகில் எம்ஜிஆரைப் போன்று, தெலுங்குத் திரையுலகில் என்டிஆரும் மிகவும் புகழ் பெற்று விளங்கியவர். அரசியலும் குதித்து ஆட்சியைப் பிடித்தவர். 1960 முதல் 1980கள் வரை என்டிஆர் சென்னையில் உள்ள பசுல்லா சாலையில்தான் வசித்து வந்தார். அந்தக் காலத்தில் திருப்பதிக்கு வரும் தெலுங்குத் திரையுலக ரசிகர்கள் அப்படியே சென்னைக்கு வந்து என்டிஆரைப் பார்த்து விட்டே செல்வார்கள். அப்போதெல்லாம் பசுல்லா சாலையில் ஆந்திராவிலிருந்து வரும் பல பேருந்துகள் நின்று கொண்டிருக்கும். ரசிகர்களுக்குத் தரிசனம் தந்து, அவர்களுக்கு வயிறாரா சாப்பாடும் போட்டு அனுப்புவார் என்டிஆர்.
என்டிஆர் வாழ்ந்த அந்த வீடு 'நந்தமூரி இல்லம்' என்று பெயரைத் தாங்கி இன்று கேட்பாரற்று சிதிலமடைந்து காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக தெலுங்குத் தொலைக்காட்சிகளில் அது பற்றிய செய்தி ஒளிபரப்பாகி, என்டிஆரின் சென்னை வீட்டின் இன்றைய நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. இரவில் குடிகாரர்களின் புகலிடமாகவும் மாறிவிட்ட அந்த வீட்டை உடனடியாக என்டிஆர் குடும்பத்தினரோ, தெலுங்கு தேசம் கட்சியினரோ புதுப்பித்து அதை நினைவிடமாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.
தற்போது ஆந்திர மாநில முதல்வராக இருக்கும் சந்திரபாபு நாயுடு, என்டிஆரின் மருகன்தான். என்டிஆரின் மகனும், நடிகரும், எம்எல்ஏவுமான பாலகிருஷ்ணாவும் அந்த வீட்டில் வசித்தவர்தான். அவர்கள் உடனே 'நந்தமூரி இல்லத்தை' புதுப்பிக்க வேண்டும் என்றே என்டிஆர் ரசிகர்கள் விரும்புகிறார்கள். அதே சமயம் அந்த வீட்டை விற்கப் போவதாகவும் ஒரு பேச்சு எழுந்துள்ளது.