கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
ஒரே நேரத்தில் ஆரஞ்சு மிட்டாய், புறம்போக்கு, நானும் ரெளடிதான், மெல்லிசை, இடம்பொருள் ஏவல், இறைவி ஆகிய படங்களில் நடித்து வந்த விஜயசேதுபதி, புதிய படங்களுக்கான கதையை இந்த நேரத்தில் கேட்டால், சரியான கதைகளை தேர்வு செய்ய முடியாது என்று தன்னிடம் கதை சொல்ல அணிவகுத்த இயக்குனர்களை அப்புறம் பார்க்கலாம் என்று திருப்பி அனுப்பிக்கொண்டிருந்தார். ஆனால். தற்போது கைவசமிருந்த பல படங்களில் அவர் நடித்து முடித்து விட்டார். இறைவி படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், அடுத்தபடியாக தன்னை வைத்து விண்ட் என்ற குறும் படத்தை ஏற்கனவே இயக்கிய காக்கா முட்டை மணிகண்டனின் புதிய படத்தில் நடிக்க ஓகே செய்திருக்கிறார் விஜயசேதுபதி. அப்படத்தின் கதை விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.